ரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய்.... 12 ராசிகளுக்கான பலன்கள்..!!

ரிஷப ராசியில் செவ்வாய்ப் பெயர்ச்சி 2024: ரிஷப ராசிக்குள் செவ்வாய் இன்று இரவு பெயர்ச்சியாகிறது. செவ்வாய்கிழமை இரவு 7.03 மணிக்கு ரிஷபம் ராசிக்குள் நுழையும் செவ்வாய், ஏற்கனவே அன்கிருக்கும் குரு பகவானுடன் இணைகிறது.

ஜோதிடத்தில் ஆற்றல், தைரியம் மற்றும் துணிச்சலின் காரணியாக செவ்வாய் கருதப்படும் நிலையில், குரு இயல்பிலேயே மென்மையானவராகவும், மங்களகரமானவராகவும் கருதப்படுகிறார்.

1 /14

குரு செவ்வாய் சேர்க்கை: ஜூலை 12 ஆம் தேதி, ரிஷப ராசியில் பெயர்ச்சியாகும் செவ்வாய் கிரகம்,  45 நாட்களுக்கு குரு பகவானுடன் இணைந்திருப்பார். ஆகஸ்ட் 26ம் தேதி வரை இணைந்திருக்கும் இந்த கிரகங்களினால் 12 ராசிக்காரர்களுக்கு குரு பகவான் செவ்வாய் இணைவது என்ன பலனைக் கொடுக்கும் என அறிந்து கொள்வோம்.

2 /14

மேஷ ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்கவும்.  இந்தக் காலக்கட்டத்தில் யாருக்கும் அதிகப் பணத்தைக் கடனாகக் கொடுக்காதீர்கள், ஏனெனில், தேவைப்படும் நேரத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற முடியாது. திருமண வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

3 /14

ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஏற்படும் நிலையில், ரிஷப ராசிகளுக்கு பலன் சாதகமாக இருக்கும். தொலைதூரப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பாராத சில நிதி நன்மைகளைப் பெறலாம். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம்.

4 /14

மிதுன ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்காது, வாழ்வில் தொல்லைகளை அதிகரிக்கும். அதிக செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில், கடன் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்காக முயற்சிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். சளி, இருமல் போன்ற உடல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

5 /14

கடக ராசிகள் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் காரணமாக வாழ்க்கையில் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். பணம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். எனினும் வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புது தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனநோய் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே தியானம் அல்லது யோகா பயிற்சி அவசியம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.  

6 /14

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் வெற்றியின் அடிப்படையில் நேரம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.  நிதி நிலையும் சிறப்பாக இருக்கும் உங்கள் தொழிலை விரிவுபடுத்த நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். வீடு, வாகனம் வாங்க நல்ல நேரம். நீரிழிவு நோயாளிகளுக்கு சில கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் எச்சரிக்கையாக இருக்கவும்.

7 /14

கன்னி ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நல்ல நிதிப் பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் எடுக்கும் முடிவுகள் உங்கள் திறனை நிரூபிக்கும் வகையில் இருக்கும். காதல் வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சருமத்தில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

8 /14

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அவ்வளவு சாதகமாக இருக்காது. குறிப்பாக ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். நாள்பட்ட மூட்டு வலி மேலும் அதிகரிக்கலாம். எனினும், குடும்ப வாழ்க்கையில் அமைதியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீடு அல்லது வாகனம் வாங்க நினைத்தால் இந்த நேரம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

9 /14

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் தாக்கம் நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாஅக இருக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமாகாதவர்கள், உறவு கை கூட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் வரக்கூடும். தொழில் ரீதியாக நேரம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களைத் தவிர யாரையும் நம்பவோ அல்லது சார்ந்திருக்கவோ வேண்டாம். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

10 /14

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்காது. வேலை சம்பந்தமான பயணங்கள் அதிகமாக இருக்கும். அதிக செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்தக் காலக்கட்டத்தில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். தலைவலி, கண் வலி போன்றவையும் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணை உடனான உறவு இனிமையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.  

11 /14

மகர ராசிக்காரர்கள் செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பாராத பல நிகழ்வுகளை சந்திக்க நேரிடும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு, நினைத்த துறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புது தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சில நல்ல செய்திகள் கிடைக்கும்.  ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனமாக இருங்கள்.

12 /14

கும்ப ராசியினருக்கு செவ்வாய் கிரகப் பெயர்ச்சியின் அசுப பலன்களால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இதனால், மன உளைச்சல்களை சந்திக்க நேரிடும். எனவே, தியானம் மற்றும் யோகா பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத தகவல்களைப் பெறலாம். வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் அதற்கான வாய்ப்பு சாதகமாக அமையும். திருமண வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

13 /14

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சியின் தாக்கத்தால் வீரம் அதிகரிக்கும்.  குடும்ப உறுப்பினர்களிடமிருந்து, குறிப்பாக சகோதர சகோதரிகளிடமிருந்து எதிர்பாரா உதவியைப் பெறுவீர்கள்.  உங்கள் இலட்சியங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், தொண்டும் செய்வீர்கள். இதனால் மனதிற்கு த்ருப்தி ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டு குடியுரிமை பெற முயற்சிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு சாதகமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.