G7 தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய கலை நயம் மிக்க பரிசுகள்

ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டின் 2 அமர்வுகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனித்துவமான கலை பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு அரிய பரிசுகளை வழங்கினார். 

1 /8

இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு பிரதமர் மோடி ராம் தர்பார்  எடுத்துரைக்கும் கலை பொருளை வழங்கினார். GI-குறியிடப்பட்ட அரக்கு கலை வடிவம் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ளது.

2 /8

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட டோக்ரா கலையை பரிசாக அளித்துள்ளார்.

3 /8

அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு நந்தி கருப்பொருளின் அடிப்படையிலான கலைப்பொருளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

4 /8

இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகிக்கு மார்பிள் டேபிள் டாப்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். 

5 /8

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸுக்கு, உலோகத்தில் அழகாக செதுக்கப்பட்ட பித்தளைப் பாத்திரத்தை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். கையால் செதுக்கப்பட்ட பித்தளைப் பொருட்கள் மொராதாபாத் மாவட்டத்தின் தலைசிறந்த படைப்பாகும்.

6 /8

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கருப்பு நிற அழகான பானைகளை பரிசாக வழங்கினார். இந்த கருப்பு பானைகள் உத்தரபிரதேச மாநிலம் நிஜாமாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.

7 /8

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இளஞ்சிவப்பு நிற ஃபிஷ்நெட் ப்ரூச் மற்றும் கஃப்லிங்க் செட் ஒன்றை பரிசாக வழங்கினார். குலாபி மீனாகாரி என்பது உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியின் GI-குறியிடப்பட்ட கலை வேலைப்பாடாகும்.

8 /8

செனகல் அதிபர் மேசி சவுலுக்கு, மூங்கில் ​​வேலைப்பாடுகளால ஆன பொருட்களை   மோடி பரிசாக வழங்கினார்.