புத்தாண்டுக்குள் இந்த வேலைகளை முடிச்சிடுங்க: டிசம்பர் 31 நினைவிருக்கட்டும்

Financial Tasks To Complete Before December 31, 2023: ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன. 

Financial Tasks To Complete Before December 31, 2023: இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டு தொடங்கவுளது. 2024 புத்தாண்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது. புத்தாண்டில் பல விஷயங்களில் புதிய தொடக்கங்கள் இருக்கும். டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் செய்துமுடிக்க வேண்டிய சில பணிகள் உள்ளன. இவற்றை முடிக்காவிட்டால், இழப்புகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

2022-23 நிதியாண்டிற்கு அபராதத்துடன் பிலேடட் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2023 ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 234F இன் கீழ், உரிய தேதிக்கு முன் ரிட்டன் தாக்கல் செய்யாத நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2 /8

தாமத ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஆனால், மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்கள் ரூ.1000 அபராதம் மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் டிசம்பர் 31க்கு பிறகு அவர்களும் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.

3 /8

இரண்டாவது மிக முக்கியமான பணி வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது. திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கூறியுள்ளது. இந்த தேதிக்குள், வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தவறியவர்களின் லாக்கர் முடக்கப்படும்.

4 /8

ரிசர்வ் வங்கி வங்கி லாக்கர் ஒப்பந்தங்களுக்கான (Locker Contracts) புதுப்பித்தல் செயல்முறையை கட்டாயமாக்கியுள்ளது. டிசம்பர் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை சமர்ப்பித்த நபர்கள், திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்தந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

5 /8

புதிய சிம் கார்டு வாங்குவதற்கான விதிகளும் ஜனவரி 1, 2024 முதல் மாறும். தொலைத்தொடர்புத் துறையின் படி, வாடிக்கையாளர்கள் இப்போது காகித அடிப்படையிலான செயல்முறை மூலம் KYC ஐச் சமர்ப்பிக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே e-KYC செய்யும். 

6 /8

இருப்பினும், புதிய மொபைல் இணைப்புகளை பெறுவதற்கான மீதமுள்ள விதிகள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. டிசம்பர் 31 வரை, சிம் கார்டுகள் ஆவணங்கள் மூலம் மட்டுமே கிடைக்கும்.

7 /8

ஜனவரி 1, 2024க்குள் டிமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நாமினி பெயரை சேர்ப்பதை செபி கட்டாயமாக்கியுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்கள் இதை செய்யத் தவறினால், அவர்களால் பங்குகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கான காலக்கெடு முன்னதாக செப்டம்பர் 30 ஆக இருந்தது, அது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

8 /8

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI), Google Pay, Paytm, Phone Pay போன்ற கட்டண செயலிகளை ஒரு வருடத்திற்கு செயலில் இல்லாத யுபிஐ ஐடிகளை (UPI ID) மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐடியை செயல்படுத்த டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளது