வாயுப் பிரச்னையில் இருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்கள் முயற்சிக்கவும்

வயிறு தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வாயு தொல்லை ஆகும். வயிற்றில் வாயு உருவாக்கம் செரிமான செயல்முறையை பகுதிக்கும். புளிப்பு, காரமான போன்ற உணவுகளை அதிகம் உண்பது, இரவு வரை விழித்திருப்பது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, கோபம், பதட்டம், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை வாயு உருவாவதற்கு காரணமாகின்றன.

வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்ற பலர் தினமும் காப்ஸ்யூல்களை உட்கொள்வது சரியான சிகிச்சையல்ல. வயிற்றில் உள்ள வாயு பிரச்சனையை நீக்கும் சில வீட்டு மருந்துகளை பற்றி இன்று நாம் காணப் போகிறோம். மருந்துகளுக்குப் பதிலாக இவற்றை உட்கொள்ளலாம். அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

1 /8

வயிற்றில் வாயு தொந்தரவு இருந்தால், இளநீரைக் குடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். இளநீர் அஜீரணத்தை போக்கி வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் தரும் மருத்துவ குணங்கள் கொண்டது.

2 /8

இலவங்கப்பட்டை உட்கொள்வதால் வாயு பிரச்சனை நீங்கும். வாயு பிரச்சனையில் நிவாரணம் பெற இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கலாம்.

3 /8

வாயு பிரச்சனையால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டால், புதினா இலையில் தேநீர் தயாரித்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். இது வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியிலிருந்தும் நிவாரணம் தர உதவுகிறது.

4 /8

ஓமம் விதைகளில் தைமால் என்ற கலவை உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. வாயு பிரச்சனை இருந்தால், அரை டீஸ்பூன் ஓமம் விதைகளை தண்ணீருடன் குடிக்கலாம்.

5 /8

இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதன் மீது உப்பு தூவி, சாப்பிடலாம். இதனால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள், பசியும் அதிகரிக்கும். வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபட இது ஒரு சிறந்த வழியாகும்.

6 /8

கிராம்பு வாயு பிரச்சனையை நீக்க உதவும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுப்பட தேனுடன் கிராம்பை  சாப்பிட்டு வர குணமாகும். கிராம்பு எண்ணெய் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.

7 /8

வாயு பிரச்சனைகளுக்கு சீரக நீர் சிறந்த வீட்டு வைத்தியம். சீரகத்தில் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, இது உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. இதனால் உணவு சரியாக ஜீரணமாகும். வயிற்றில் அதிகப்படியான வாயு உருவாவதையும் தடுக்க உதவுகிறது.

8 /8

பெருஞ்சீரகம் விதைகள் வயிற்று வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.