இந்த சிவராத்திரி சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.. செல்வம் பெருகும்

Mahashivratri lucky zodiac: மகாசிவராத்திரி விழா வருகிற மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த மகாசிவராத்திரியில் அபூர்வ யோகமும் உண்டாகிறது, இதனால் இந்த சிவராத்திரியில் எந்த ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மகா சிவராத்திரி விழா வருகிற மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த மகாசிவராத்திரியில் அபூர்வ யோகமும் உண்டாகிறது, இதனால் இந்த சிவராத்திரியில் எந்த ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

 

1 /8

சிவ பெருமான்  மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். அதேபோல் சிவலிங்கம் என்பது சிவ பெருமானின் அருவுருவ வடிவமாகும். சிவபெருமானை எத்தனையோ திருநாமங்களைக் கொண்டு நாம் அழைத்தாலும் அதிகமாக அவரை குறிப்பிடும் ஒரே சொல் சிவம். சிவம் என்ற ஒற்றை சொல்லுக்குள் அனைத்தும் அடக்கம்.  

2 /8

மகா சிவராத்திரி: ஜோதிடத்தின் படி, மகாசிவராத்திரி வருகிற மார்ச் 8ஆம் நிகழப்போகிறது. இந்நாளில் மிகவும் அரிதான மற்றும் சிறப்பு வாய்ந்த யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிவனின் சிறப்பான ஆசியைப் பெறவுள்ளார்கள்.  

3 /8

ரிஷபம்: இந்த மகாசிவராத்திரி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மங்கள பலன் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு பெறலாம். சிவனின் அருளால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும்.  

4 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி அற்புதமாக இருக்கப் போகிறது. தொழிலில் வெற்றி, பண வரவு, மரியாதை, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவை பெறலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

5 /8

துலாம்: இந்த மகாசிவராத்திரி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலனை அள்ளித் தரும். நிதி நிலை மேம்படும், பல நன்மைகளைப் பெறுவார்கள். வேலையில் வெற்றி உண்டாகும். பணியிடத்திலும் வியாபாரத்திலும் ஏற்படும் சங்கடங்களை சிவன் உடனுக்குடன் தீர்த்து வைப்பார்.

6 /8

மகரம்: ஜோதிடத்தின் படி, மகர ராசி சிவப் பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும். இந்த மகா சிவராத்திரி சிவபெருமானின் அருளும் நீங்கள் பெறுவீர்கள். அனைத்து பிரச்சனைகளும் விலகும். சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

7 /8

கும்பம்: இந்த மகாசிவராத்திரி கும்ப ராசியினருக்கும் மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களின் அனைத்து ஆசைகலையும் சிவப் பெருமான் நிறைவேற்றுவார். பதவி உயர்வும், சம்பள உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.