அளவிற்கு மிஞ்சிய கஷாயம் பேராபத்து... எச்சரிக்கும் நிபுணர்கள்!

குளிர்காலத்தில் நோயிருந்து தப்பிக்க கரு மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், அஸ்வகந்தா மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களைக் கொண்டு கஷாயம் செய்து குடிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால்ஆர்வ கோளாறில், ஒரு நாளைக்கு மூன்று முறை கஷாயம் குடித்தால், நீங்கள் எதிர் விளைவை சந்திக்க நேரிடும். 

கஷாயம்  செய்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழி என்பதில் சந்தேகமில்லை. எனினும், கஷாயத்தை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன, அது எந்த வகையில் ஆரோக்கியத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்...

1 /5

இரைப்பை பிரச்சனை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி-இருமல், சளி போன்றவற்றை தவிர்க்கவும், தேவைக்கு அதிகமாக கஷாயத்தை குடித்தால், வயிற்றில் வாயு உருவாகத் தொடங்கும், எனவே குறைந்த அளவு கஷாயத்தை குடிக்கவும்.

2 /5

நாசி பிரச்சனை: கஷாயத்தை அதிகமாக உட்கொள்வது நாசி பிரச்சனையை ஏற்படுத்தும். நீங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால், மூக்கில் வறட்சி அல்லது மூக்கில் இரத்தப்போக்கு அதிகரிக்கும் அபாயம் இருக்கலாம்.

3 /5

வயிற்றில் அமிலம் குவிதல்: கஷாயத்தை அதிகமாக குடிப்பவர்களுக்கு வயிற்றில் அமிலம் சேரும். இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

4 /5

வாய் புண்கள்: கஷாயத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால், அது நல்லதை விட தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது வாய் புண்களை உண்டாக்கும்.

5 /5

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: கஷாயத்தை அதிகமாக குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்தும். இது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலையும் ஏற்படுத்தும்.  (குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE மீடியா இதற்கு பொறுப்பேற்காது)