Indian Railways: இனி கிடைக்கும் அதிக பாதுகாப்பான ஸ்மார்ட் பயணம், காரணம் இதுதான்

Indian Railways: இந்திய ரயில்வே மற்றும் அதன் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சியால், இப்போது ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக மாறவுள்ளது. இனி நாடு முழுவதும் ரயில்களின் செயல்பாடு முன்பை விட மிகவும் சிறந்ததாக இருக்கும். 

அரசாங்கத்தால் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையால் இவை அனைத்தும் சாத்தியமாகும். இந்திய ரயில்வேயை ஒரு தன்னம்பிக்கை மிகுந்த ரயில்வேயாக மாற்ற அரசாங்கம் விரும்புகிறது. இதில் அலைக்கற்றை எவ்வாறு பங்களிக்கும், என்ன விஷயங்கள் மேம்படும் என்பதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

1 /5

இந்திய ரயில்வேக்கு 700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் 5 மெகா ஹெர்ட்ஸ் (பேர்ட்) அலைக்கற்றையை ஒதுக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். (IANS)

2 /5

அலைக்கற்றை ரயில்களின் தொழில்நுட்பத்தை மாற்றிவிடும். பின்னர் சிக்னலிங் மற்றும் தொலைதொடர்பு நவீனமயமாக்கப்படும். அலைக்கற்றை மூலம் அதிவேக ரேடியோ தகவல்தொடர்பு இன்னும் சிறப்பாக மாறும்.   

3 /5

நாட்டில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த மேட் இன் இந்தியா ரயில் விபத்து மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். லோகோ ரயில் ஓட்டுனர்களுக்கு  இடையிலான தொடர்ச்சியான தொடர்பு மேம்படுத்தப்படும். (ராய்ட்டர்ஸ்)

4 /5

அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரயில்வேயை ஒரு தற்சார்பு ரயில்வேயாக மாற்றுவதற்கான நோக்கத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கருத்தும் உள்ளடங்கியுள்ளது. ரெயில்வேவை தற்சார்பு மிக்கதாக்க, 25000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். தற்சார்பு ரயில்வேவுக்கான பணிகள் ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும்.

5 /5

இந்த முயற்சி இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) அடிப்படையிலான தொலைநிலை கண்காணிப்பு மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம். இதன் மூலம் ரயில் பெட்டிகளின் சேவை, வேகன், லோகோ மற்றும் சிசிடிவி கேமராக்களின் நேரடி வீடியோ ஊட்டம் மேம்படுத்தப்படும். இதனால் ரயிலில் பயணம் செய்வது இன்னும் பாதுகாப்பானதாக ஆவதோடு ரயில் செயல்பாடும் வேகமாக இருக்கும். (ராய்ட்டர்ஸ்)