இந்தியா மூத்த சகோதரர் - இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரர் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்வதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.  

Last Updated : Apr 7, 2022, 04:46 PM IST
  • இலங்கைக்கு உதவிய இந்தியா
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடி
  • பெரும்பான்மையை இழந்த ஆளுங்கட்சி
இந்தியா மூத்த சகோதரர் - இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா title=

இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் அனைத்து விண்ணை முட்டும் அளவு இருக்கிறது. அதுமட்டுமின்றி நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 மணி நேரம்வரை மின்வெட்டும் ஏற்படுகிறது.

இதனையடுத்து மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் ராஜபக்‌ஷே உள்ளிட்டோர்தான் காரணம். எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர்.

Srilanka Crisis

இந்தச் சூழலில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ராஜபக்‌ஷே கட்சிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டதால் 103 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதால்  ராஜபக்‌ஷேவின் கட்சி பெரும்பான்மையை இழந்தது. 

மேலும் படிக்க | இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

ஆனாலும், பதவி விலகுவதில்லை என்பதில் அதிபரும், பிரதமரும் பிடிவாதமாக இருக்கிறனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி அரசியல் நெருக்கடியும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கைக்கு இதுவரை இரண்டு லட்சத்து 70,000 மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியா வழங்கி உதவி செய்துள்ளது.

Srilanka Crisis

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எப்போதும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அண்டை நாடான இந்தியா மூத்த சகோதரர் ஸ்தானத்தில் எங்களுக்கு எப்போதுமே உதவிவருகிறது.

மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் இலங்கை

இந்த சூழலை நாங்கள் தாக்குப்பிடிப்பது கடினம். இந்தியாவின் உதவியால் இதிலிருந்து நாங்கள் மீள்வோம். இலங்கையில் வாழ முடியாத சூழல் இருப்பதால்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தற்போதைய இலங்கையின் நிலைமைக்கு அரசுதான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வன்முறையின்றி மக்கள் போராட வேண்டும்” என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News