‘17 வருட கனவு..’ ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி..? மனம் திறக்கும் தமன்னா..!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து அதில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என நடிகை தமன்னா மனம் திறந்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 10, 2023, 09:02 AM IST
  • ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
  • இதில் தமன்னா நடித்துள்ளார்.
  • இந்த படத்தில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார்.
‘17 வருட கனவு..’ ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி..? மனம் திறக்கும் தமன்னா..! title=

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகை தமன்னாவும நடித்திருக்கிறார். இவர், ஜெயிலர் படத்தில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்றும் பேசியிருக்கிறார். 

தமன்னா:

நடிகை தமன்னா, தமிழ் திரையுலகிற்கு ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானார். இந்தி திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவரை அன்புடன் ஏற்றுக்கொண்டனர். விஜய், தனுஷ், கார்த்தி, சூர்யா உள்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலேயே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது திரையுலகில் பெரிதாக வளர்ந்த பிறகு நிறைய இந்தி படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. 

ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி..? 

தமன்னா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் “ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி..?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்த போது தன்னை ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அழைத்ததாக கூறினார். அப்போதுதான் ஜெயிலர் படம் குறித்து அவர் தன்னிடம் பேசியதாகவும், அதில் ரஜினிகாந்த் ஹீரோ என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதை கேட்டவுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

17 வருட கனவு:

நடிகை தமன்னா, தமிழ் திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டன. சினிமாவிற்கு அறிமுகம் ஆனதில் இருந்து இப்போது வரை தமன்னா நிறைய முன்னணி நடிகர்களுடன்தான் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனால் இத்தனை நாட்களாக அவருக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. தனது 17 வருட கனவு இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார். 

தமன்னாவின் கதாப்பாத்திரம் என்ன..? 

தமன்னா, ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலிற்கு மட்டுமே நடனமாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தமன்னா இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இவரது கதாப்பாத்திரம் பட ரிலீஸ் வரை சர்பரைஸாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமன்னாவின் அடுத்தடுத்த படங்கள்..

தமன்னா நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகியுள்ளதை ஒட்டி, அடுத்து தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார். மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘போலா ஷங்கர்’ திரைப்படம். இந்த படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இது, அஜித் நடிப்பில் தமிழில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீ-மேக். இதில் அஜித் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவியும் லக்ஷமி மேனன் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் கதாப்பாத்திரத்தில் நடிகை தமன்னா வருகிறார். படம், நாளை வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | “எதிர்பார்த்த மாதிரி இல்லையே..” ரசிகர்களை ஏமாற்றிய ஜெயிலர்? ட்விட்டர் விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News