மறைந்த நடிகர் சுஷாந்தின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்திக்கு எதிராக FIR பதிவு செய்துள்ளார்

தற்கொலை செய்துக்கொண்ட நடிகர் சுஷாந்தின் தந்தை ரியா சக்ரவர்த்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2020, 07:55 PM IST
மறைந்த நடிகர் சுஷாந்தின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்திக்கு எதிராக FIR பதிவு செய்துள்ளார் title=

Sushant Singh Rajput suicide case: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங், அவரது மகன் தற்கொலை செய்துக்கொண்டதற்கு, அவரின் காதலி ரியா சக்ரவர்த்தியும் காரணம் எனக்கூறி, அவருக்கு எதிராக பாட்னா போலீசில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்துள்ளார். பாட்னா மத்திய மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சய் சிங், ஏ.என்.ஐ (ANI) செய்தி ஊடகத்திடம் பேசுகையில், தற்கொலைக்கு காரணமாக இருந்தார் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் அவர், "நான்கு பேர் கொண்ட குழு மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு மும்பை போலீசாரிடமிருந்து வழக்கு குறித்து தகவல்களையும் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை சேகரிக்கும்" என்று சிங் மேலும் கூறினார்.

ஜூன் 14 அன்று நடிகர் சுஷாந்த் தற்கொலை (Sushant Singh Rajput Suicide) செய்து கொண்டார். மும்பை காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது, ஏற்கனவே நடிகை ரியாவிடம் விசாரணை மேற்கொண்டு, அவரின் அறிக்கையை கடந்த மாதம் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியையும் போலீசார் விசாரித்தனர். சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, தர்மா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா உட்பட இதுவரை 40 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

Sushant Singh Rajput-Ani Tweet

ALSO READ | Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!

இதற்கிடையில், இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு ரியா (Rhea Chakraborty) உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தரப்பில், "மரியாதைக்குரிய அமித் ஷாசி அவர்களுக்கு, நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரவர்த்தி, அவர் இரண்டு இப்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. எனக்கு அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, இருப்பினும் உண்மையான நீதி நிலைநாட்ட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும் என கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சிபிஐ விசாரணை கோருவதன் முக்கிய நோக்கம், சுஷாந்தை தற்கொலை செய்ய தூண்டியது என்ன என்பதை நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உண்மையுள்ள, ரியா சக்ரவர்த்தி" என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் உள்துறை அமைச்சரின் @amitshahofficial டேக் செய்து எழுதி உள்ளார். 

ALSO READ | சுஷாந்த் தற்கொலை கடிதம் எழுதியிருக்க வேண்டும்: சேகர் சுமனின் ட்வீட்

Trending News