உங்க அம்மா உனக்கு என்னதான் சொல்லி கொடுத்தா? செளந்தரபாண்டியின் கேள்விக்கு பதில் என்ன?

Zee Tamil Anna Serial August 24 Episode Update: பசியில் தவிக்கும் சௌந்தரபாண்டி.. பாக்கியத்தை பாசத்தால் கலங்க வைத்த சண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2023, 01:32 PM IST
  • பசியில் தவிக்கும் சௌந்தரபாண்டி
  • பாக்கியத்தை பாசத்தால் கலங்க வைத்த சண்முகம்
  • அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்
உங்க அம்மா உனக்கு என்னதான் சொல்லி கொடுத்தா? செளந்தரபாண்டியின் கேள்விக்கு பதில் என்ன? title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பரணியை சாப்பாடு எடுத்து வைக்க சொல்ல அவ சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கீங்களா என்று கேட்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்களா? நீ சமைக்கலையா என்று கேள்வி கேட்க எனக்கு தான் சமைக்கவே தெரியாதே என்று பதில் கொடுக்கிறாள். 

உங்க அம்மா உனக்கு என்னதான் சொல்லி கொடுத்தா என்று சௌந்தரபாண்டி கேட்க சுடுதண்ணி வைக்க சொல்லி தந்தாங்க, வச்சி எடுத்துட்டு வரவா என்று திருப்பி கேட்க எடுத்துட்டு வந்து என் தலையில ஊத்து என்று சௌந்தரபாண்டி சொல்ல சனியன் ஐயா அப்படி சொல்லாதீங்க அம்மா செஞ்சாலும் செஞ்சுடுவாங்க என்று சொல்கிறான். 

அடுத்ததாக சனியன் ஐயா நான் வேணும்னா வீட்டுக்கு போயிட்டு பழைய கஞ்சி எடுத்துட்டு வரவா என்று கேட்க, என்னலே பொண்டாட்டி இல்லனா சாப்பாடு இல்லாம கஷ்டப்படுவேனு நினைச்சியா போய் நல்ல ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வா என்று சனியனை அனுப்பி வைக்கிறார் சௌந்தரபாண்டி. 

மறுபக்கம் வைகுண்டம் ஏற்கனவே ஒரு ஆட்டை பார்ட் பார்ட்டாக எடுத்து வந்து சமைக்க கொடுத்திருக்கும் நிலையில் கடலுக்கு போன சண்முகம் எக்கச்சக்கமான மீன்களை எடுத்து வர போலீஸ்காரர்கள் இதைப் பார்த்து உங்க அத்தை ரொம்ப கொடுத்து வச்சவங்க என்று சொல்கின்றனர். சண்முகம் இதை தங்கைகளிடம் எடுத்து வந்து கொடுக்க அவர்கள் ஏற்கனவே அப்பா நிறைய வாங்கி வந்து கொடுத்திருக்கிறார் என்று சொல்ல இதையும் சேர்த்து சமைங்க என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்

எல்லாத்தையும் சமைத்து பாக்கியத்துக்கு பரிமாற என் வீட்டுல எல்லாரையும் நான் ஓடி ஓடி கவனிச்சிருக்கேன் ஆனா ஒருத்தரும் என்னை ஒரு நாளும் நீ சாப்டியா என்று கேட்டதில்லை, ஆனா நீங்க எல்லாரும் மாத்தி மாத்தி என்னை கவனிக்கிறது பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். 

அடுத்து பரணி வீட்டுக்கு வர பரணியையும் உட்கார வைத்து சாப்பிட வைக்கின்றனர். இசக்கி சிவபாலனுக்கு எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்து பரணியிடம் போகும் போது இதையும் கொண்டு போ என்று சொல்ல அவள் என்னை வீட்ல டிரா பண்ணிட்டு என்று சண்முகத்தை கூப்பிடுகிறாள்.

இந்த நேரத்துல நீ அங்க போக வேண்டாம் என்று பாக்கியம் சண்முகத்தை தடுத்த நிறுத்த பரணி ஏன் போகக்கூடாது? நான் ஆட்டோல தான் வந்தேன் என்னை டிராப் பண்ணட்டும் என்று சொல்ல வைகுண்டம் அவங்க ஏதாவது பேசினா நீ கோவப்படாம இரு என்று சொல்ல அவங்க ஏடாகூடமா பேசினா நானும் ஏளாகூடமாக ஏதாவது பண்ணி விட்டு வந்து விடுவேன், நான் என்ன பண்ணனும்னு அவங்க தான் முடிவு பண்ணனும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். 

ஒரு பக்கம் சௌந்தரபாண்டி கோபத்தில் காத்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் சண்முகம் பரணியை கூட்டிக்கொண்டு கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ் படங்கள்..! முழு லிஸ்ட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News