நடிகைகளை தொடர்ந்து பாடகிக்கும் பாலியல் துன்புறுத்தல்!

நடிகைகளை தொடர்ந்து பாடகிகளையும் விட்டுவைக்காத பாலியல் தொல்லை!

Last Updated : Mar 13, 2018, 06:53 AM IST
நடிகைகளை தொடர்ந்து பாடகிக்கும் பாலியல் துன்புறுத்தல்! title=

பிரபல பின்னணி பாடகி சின்மயி நேற்று நடந்த விழாவொன்றில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகைகள் பொது வாழ்வில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொள்வது, தற்போது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகியான சின்மயி நேற்று நடைபெற்ற விழாவொன்றில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு  ஆளானதாக வெளிப்படையான தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது....! 

"வெகு காலத்திற்குப் பிறகு நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பல ஆண்களும்-பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கதையை பகிர்ந்தார்கள். அதில், ஆசிரியர்கள், சகோதர்கள், தாத்தா-பாட்டிகள், உறவினர்கள், சக பயணிகள் என நெருங்கிய நபர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக  உள்ளனர் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

 

Trending News