பரணிக்கு ஷண்முகம் செய்த சத்தியம், சௌந்தரபாண்டி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி துணிக்கடையில் சண்முகத்தை கண்ணீருடன் கட்டி பிடித்து அழுத நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2023, 12:10 PM IST
  • சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
  • ஷண்முகம் ரத்னாவுக்கு புடவை எடுக்க வந்ததாக சொல்கிறான்.
  • ஷண்முகம் ரெண்டு கர்சீப் மட்டும் வாங்கி கொள்கிறான்.
பரணிக்கு ஷண்முகம் செய்த சத்தியம், சௌந்தரபாண்டி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி துணிக்கடையில் சண்முகத்தை கண்ணீருடன் கட்டி பிடித்து அழுத நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

இன்றைய காலகட்டத்தில், சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலை பார்க்கலாம் என்பதால், பெண்களிடையே பிரபலமாகி விட்ட சீரியல்கள், தற்போது, அனைவருக்கும் போதை கொடுக்கும் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதாவது, ஷண்முகம் அதிர்ச்சியோடு என்னலே என்னாச்சு என்று விசாரிக்க பரணி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறாள், இதை ஏன்ல என்கிட்டே சொல்ற மாமா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று கேட்க பரணி அவருக்கு தெரியும், ஆனால் அவர் சொல்ற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றாரு என்று சொல்ல எல்லாம் சரியாகிடும் என ஷண்முகம் பரணியை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவள் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறாள். 

மேலும் பரணி எனக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்ல, இந்த கல்யாணத்த நீ தான் எப்படியாவது நிறுத்தணும் என்று சொல்லி சத்தியம் கேட்க ஷண்முகம் இந்த கல்யாணத்தை நான் நிறுத்தறேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறான். பிறகு பாக்கியம் சண்முகத்தை பார்த்து என்னடா எதுக்கு வந்தேனு சொல்லவே இல்லை என்று கேட்க அவன் நீங்களும் தான் சொல்லவே இல்லை என்று சொல்கிறான். 

பிறகு பாக்கியம் பரணிக்கு கல்யாண புடவை எடுக்க வந்ததாக சொல்ல ஷண்முகம் ரத்னாவுக்கு புடவை எடுக்க வந்ததாக சொல்கிறான். இதை தொடர்ந்து கடைக்காரன் பாக்கியத்திடம் இது கூரை புடவை இதை கல்யாண பொண்ணுக்கு கட்டிக்க போறவன் அல்லது முறைப் பையன் கையால் தான் கொடுக்கணும் என்று சொல்ல பாக்கியம் ஷண்முகத்தை கொடுக்க சொல்கிறாள். 

 மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

பிறகு ஷண்முகம் அந்த புடவைவை வாங்கி கொடுக்க பரணி வருத்ததோடு வாங்கி கொள்கிறாள். இதை தொடர்ந்து தங்கைகள் பிடித்த மாதிரி புடவை எடுத்து கொண்டு ஷண்முகத்திடம் உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் எடுத்துக்க என்று சொல்ல அவன் ரெண்டு கர்சீப் மட்டும் வாங்கி கொள்கிறான். 

பிறகு செப்பல் கடைக்கு வந்து ஆளாளுக்கு பிடித்த மாதிரி செருப்பு எடுக்க இசக்கி விலையுயர்ந்த ஒரு செப்பலை எடுக்க மற்ற சகோதரிகள் வீட்ல இருக்க உனக்கு எதுக்கு இந்த செப்பல் என சொல்லி அவளை காயப்படுத்த இசக்கி செப்பல் எடுக்காமல் வெளியே வருகிறாள். ஷண்முகம் ஏன் என்று கேட்க வீட்ல இருக்க எனக்கு எதுக்கு செப்பல் என்று சொல்ல ஷண்முகம் வீட்டு வேலைகளை பார்ப்பது தான் பெரிய கஷ்டமான வேலை என்று சொல்லி அவளுக்கு பிடித்த செப்பலை எடுத்து கொடுக்கிறான். 

அடுத்து ஷண்முகம் கடைக்காரனிடம் தனது பிஞ்சி போன செப்பலை கொடுத்து தைத்து தர சொல்ல இதை இதுக்கு மேலயும் தைக்க முடியாது, புது செப்பல் எடுத்துக்க சொல்ல அவன் இருக்கிற செலவுல எனக்கு எதுக்கு செப்பல் என அதையே தைத்து கொடுக்க சொல்லி வெறும் காலோடு நடந்து வீட்டுக்கு வருகிறான். 

மறுபக்கம் வீட்டில் பரணி பாக்கியத்திடம் கல்யாணத்தை பற்றி கோபமாக பேசி கொண்டிருக்க இதை பார்த்து சௌந்தரபாண்டி அம்மாவும் மகளும் என்ன பேசிட்டு இருக்கீங்க, இந்த ஜென்மத்துல உனக்கு நான் பார்த்த மாப்பிளையோட தான் கல்யாணம், அடுத்த ஜென்மத்துல வேற எவனுக்காவது பிறந்து உனக்கு பிடித்த மாதிரியான ஆளை கல்யாணம் பண்ணிக்க என்று கோபமாக பேச பரணி செய்வதறியாது நிற்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News