மாப்பிள்ளைக்கு காபி கொடும்மா! கிண்டல் செய்யும் செளந்தரபாண்டி! கண்கலங்கும் ஷண்முகம்

Zee Tamil Anna Serial: கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய சௌந்தர பாண்டி, கலங்கி நின்ற ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2023, 10:56 AM IST
  • கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய சௌந்தர பாண்டி
  • கலங்கி நின்ற ஷண்முகம்
  • அண்ணா சீரியல் அப்டேட்
மாப்பிள்ளைக்கு காபி கொடும்மா! கிண்டல் செய்யும் செளந்தரபாண்டி! கண்கலங்கும் ஷண்முகம் title=

சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பி பார்க்கும் கால்ம் இது. வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலை பார்க்கலாம் என்பதும், பணம் குறைவாக செலவழித்தாலே போதும் என்பதாலும், பெண்களிடையே பிரபலமாகி விட்ட சீரியல்கள், தற்போது, அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்காக மாறிவிட்டது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

அண்ணா சீரியல் நேற்றைய எபிசோட்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணியிடன் கல்யாணம் பற்றி கேட்க அவள் இது அப்பாவின் வேலை என நினைத்து முழு சம்மதம் என்று சொல்ல ஷண்முகம் சந்தோசமான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்

சண்முகமும் பரணியும் பேசி கொண்டிருக்கும் போது பரணியை வீட்டில் கூப்பிட பிறகு ஷண்முகம் ஹாலுக்கு செல்ல சௌந்தரபாண்டி அவனை உட்காருங்க மாப்பிள்ளை என உட்கார வைக்கிறான்.

கொஞ்ச நேரத்தில் பரணி காபி கொண்டு வந்து சண்முகத்துக்கு கொடுத்து அவன் கன்னத்தை கிள்ள, அது ஷண்முகத்தின் கற்பனை என தெரிய வருகிறது. 

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

இதனையடுத்து பரணி காபியுடன் வந்து ஷண்முகத்துக்கு கொடுக்க போக அந்த சமயம் சௌந்தரபாண்டி முதலில் மாப்பிள்ளைக்கு கொடுமா என்று சொல்ல ஷண்முகமும் அவனது தங்கைகளும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஷண்முகத்துக்கு கண்கள் கலங்க சௌந்தரபாண்டி என்ன மாப்பிள்ளை சும்மா உக்கார்ந்துட்டு இருக்கீங்க, அந்த கலரை உடைத்து எல்லாருக்கும் கொடுங்க என ஷண்முகத்தை அவமானப்படுத்துகிறார். பரணியும் தனக்குள் இருக்கும் வருத்தத்தை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறாள்.

அதன் பிறகு ஷண்முகம் தனது தங்கைகளோட வீட்டுக்கு நடந்து வர நான்கு தங்கைகளும் சௌந்தரபாண்டியையும் சிவபாலனையும் திட்டுகின்றனர். அதன் பிறகு வழியில் அப்பா வைகுண்டம் போதையில் விழுந்து கிடக்க ஷண்முகம் அவரை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து செல்கிறான். 

வீட்டுக்கு போனதும் அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே சென்று இப்போ உனக்கு சந்தோசமா இருக்குமே, என்னை திட்டணும் போல இருக்குமே என கோபப்படுகிறான்,

மேலும் உன்ன மாதிரி நானும் தங்கச்சிகளை பற்றி நினைத்து பார்க்காமல் தப்பு பண்ண பார்த்தேன், இனிமே இப்படி பண்ண மாட்டேன் என வருத்தப்பட இதை பார்த்து அவனது நான்கு தங்கைகளும் பீல் செய்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். இந்த பரபரப்பான சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: மாப்பிள்ளையாக மாறும் ஷண்முகம்! கல்யாணம் இப்போ தேவையா? கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News