நான் வாய் திறந்தா சமந்தா மானம் போய்டும்.. விளாசும் தயாரிப்பாளர்! என்ன நடந்தது?

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி மோசமாக விமர்சித்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி என்ன தான் பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளலாம்.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 26, 2023, 01:25 PM IST
  • சிட்டிபாபுவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல்.
  • என்ன தான் பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நான் வாய் திறந்தா சமந்தா மானம் போய்டும்.. விளாசும் தயாரிப்பாளர்! என்ன நடந்தது? title=

இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்து வெளியான படம் தான் சாகுந்தலம். புராண கதையை மையமாக கொண்டு உருவான இந்தப்படம் 3டியில் வெளியானது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படத்துக்காக சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா மிகவும் மெனக்கெட்டார். பல்வேறு ஊர்களுக்கு பறந்தார். பான் இந்தியா படமாக இந்தப்படம் வெளியானது. சமந்தா இந்தப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பிரமோஷனில் கலந்துகொண்டார். 

கடந்த சில மாதங்களாகவே மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அதற்கான சிகிச்சையில் உள்ளார். தற்போது உடல்நிலை தேறி வருகிறார். இதற்கு நடுவே சாகுந்தலம் குறித்து மிகவும் உருக்கமாக பேட்டி கொடுத்தார்.

மேலும் படிக்க | விரைவில் முடிவுக்கும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆனால் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதுவரை வெறும் 10 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது. இதனால் பலரும் சமந்தாவை விமர்சித்தனர். அந்த வகையில், தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு சமந்தாவை மோசமாக விமர்சித்தார். அவர் சாகுந்தலம் படத்தின் தோல்வியால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் தனக்கு நோய் உள்ளதாகக் கூறியது எல்லாம் நடிப்பு தான். இப்படி அனுதாபமாக பேசி படங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார். ஹீரோயின் தகுதியை சமந்தா இழந்துவிட்டார். சகுந்தலையாக நடிக்க அவர் சரியான தேர்வு இல்லை. உடல்நிலை குறித்து உருக்கமாக பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்கிறார் சமந்தா என வெளிப்படையாக விமர்சித்தார்.

இதனையடுத்து சமந்தா டென்ஷனாகி சிட்டி பாபுவுக்கு பதிலடி கொடுத்தார். அவர் தனது இன்ஸ்டாவில், காது மடலில் எப்படி அதிகமாக முடி வளர்கிறது என கூகுளில் தேடி, அதற்கு வந்த பதிலை ஷேர் செய்திருந்தார். அதில், காது மடலில் அதிகமாக முடி வளர்ந்தால் அதிக ஹார்மோன் சுரப்பதாக அர்த்தம். இந்த பிரச்சனை யாருக்கு என்பது உங்களுக்கு தெரியும் என சிட்டி பாபு பெயரை குறிப்பிடாமல் எழுதினார். சிட்டி பாபுவுக்கு காது மடல்களில் அதிகமாக முடி இருக்கும். அதைத்தான் சமந்தா சுட்டிக்காட்டி இருந்தார். 

இந்த பதில் வைரலானதை அடுத்து, மீண்டும் பேட்டி ஒன்றில் சிட்டி பாபு சமந்தாவை சீண்டியுள்ளார். அவர், என் பெயரை சமந்தா தன் பதிவில் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், நான் சொன்ன வார்த்தைகளுக்கு பதில் அளித்திருக்கலாம். நான் சமந்தா பற்றி வாய் திறந்தால் சமந்தா மானம் போய்விடும் என காட்டமாக விளாசியுள்ளார். 

இந்த மோதல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகையான சம்ந்தாவை தயாரிப்பாளர் மோசமாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ரசிகர்கள் சிட்டிபாபுவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லோகேஷ் கனகராஜ்! எந்த படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News