மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா?

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்ததை சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2022, 07:27 AM IST
  • பிரியங்கா சோப்ரா 2018ம் ஆண்டு நிக் ஜோனஸ் என்பவரை திருமனம் செய்துகொண்டார்.
  • கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலமாக பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
  • மீண்டும் வாடகை தாய் மூலமாக இரண்டாவது குழந்தை பெற திட்டம்.
மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா? title=

பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கமும் சென்றுவிட்டார்.  இவர் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமனம் செய்துகொண்டார்.  இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலமாக பெண் குழந்தையை பெற்றெடுத்தனர், அந்த பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி.  இந்த குழந்தை பிறந்ததை இந்த தம்பதியினர் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.  வலைதள பக்கத்தில் அவர்கள் தெரிவித்ததாவது, 'வாடகை தாய் மூலமாக எங்கள் குழந்தையை பெற்றதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம், இந்த ஸ்பெஷலான நேரத்தில் நாங்கள் எங்கள் எங்கள் குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருந்தனர். 

Priyanka Chopra

மேலும் படிக்க | விஜய், அஜித் தவறவிட்ட வாய்ப்பு! பயன்படுத்தி கொண்ட சூர்யா!

இந்த தபதியினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.  தற்போது இந்த தம்பதியினர் அவர்களின் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க போவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.  அதாவது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ஜோடி ஒருவருக்கு உடன்பிறப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களது பெண் குழந்தை மல்டி மேரி தம்பியுடனோ அல்லது தங்கையுடனோ சேர்ந்து வளர வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Priyanka Chopra

தனது சகோதரர்களான ஜோ மற்றும் கெவின் ஆகியோர்களோடு தான் எப்படி இருந்தேனோ அதுபோன்று அவர்களது குழந்தைகளோடு என் குழந்தையும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக நிக் ஜோனஸ் தெரிவித்துள்ளார்.  பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் அவர்களது வாழ்க்கையில் அவர்களது உடன்பிறப்புகள் எப்படி முக்கியமான பகுதியாக இருந்தார்களோ அதுபோன்று தன் மகளுக்கும் ஒரு துணை வேண்டும் என்று கருதுகின்றனர்.  முதல் குழந்தையை போலவே இரண்டாவது குழந்தையையும் இவர்கள் வாடகை தாய் மூலமாக பெற்றெடுத்து கொள்ளப்போவதாக சில செய்திகள் கூறுகிறது.  இருப்பினும் இது எப்போது என்று இருவரும் இன்னும் முடிவு செய்யவில்லை.

மேலும் படிக்க | வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசிய சரத்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News