தூங்க சொன்ன பாடகி - வைரலாகும் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்

போதுமான அளவு தூங்குங்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் பாடகி ஸ்வேதா மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 5, 2022, 08:04 PM IST
  • ஏ.ஆர். ரஹ்மானிடம் கோரிக்கை வைத்த பாடகி
  • பயங்கர பிஸியாக இருக்கும் இசையமைப்பார் ஏ.ஆர். ரஹ்மான்
தூங்க சொன்ன பாடகி - வைரலாகும் ஏ.ஆர். ரஹ்மானின் பதில் title=

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற அவர் அடுத்தடுத்து இசையமைத்த பாடல்கள் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பரவின. இதனையடுத்து அவர் இசைப்புயல் என அழைக்கப்பட்டார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்திக்கு சென்ற ரஹ்மான் அங்கும் தனது முத்திரையை பதித்தார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றார். 

Rahman

இதனையடுத்து இந்தியாவின் பெருமைமிகு முகங்களில் ஒருவர் ஆனார் ஏ.ஆர். ரஹ்மான். அவர் தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் மாமன்னன், விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா, பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் இரவின் நிழல், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி கச்சேரிகளும் செய்துவருகின்றார். சமீபத்தில்கூட ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது மைதானத்தில் தனது குழுவினருடன் பாடல்களை பாடினார்.

Shweta Mohan

இதற்கிடையே மகளின் திருமண வேலைகள், துபாய் எக்ஸ்போ, கான்ஸ் பட விழா என படுபிஸியாக இருந்தார். அதுமட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 21 வரை இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும் படிக்க | முடிவை மாற்றிய உதயநிதி - உற்சாகத்தில் உடன் பிறப்புகள்

இந்நிலையில் ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடிய ஸ்வேதா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானை டேக் செய்து, “தயவு செய்து உங்கள் உடல்நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். போதுமான அளவு தூங்குங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த ரஹ்மான், ‘கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். என் மீது அக்கறை காட்டியதற்கு நன்றி” என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

மேலும் படிக்க | ரோலக்ஸ் vs டில்லி கதாபாத்திரத்தை 8 வருடங்களுக்கு முன்னரே கணித்த சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News