ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..

Jayam Ravi Allegations On His Mother In Law : “நான் செய்யும் செலவுக்கு மட்டும் கணக்கு கேட்கிறார்.  அதை என் உதவியாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்கிறார்.  இது என் தன்மானத்தை பாதிக்கும் செயல்” என்று விவாகரத்துக்கான காரணமாக சொல்கிறார் ஜெயம் ரவி.  

Written by - Yuvashree | Last Updated : Sep 27, 2024, 06:58 PM IST
  • மாமியார் டார்ச்சர் குறித்து பேசும் ஜெயம் ரவி
  • விவாகரத்துக்கு காரணம் என்ன?
  • பாடகியுடன் தொடர்பா?
ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்.. title=

Jayam Ravi Allegations On His Mother In Law : திருமணத்திற்கு முன்பு வரையிலும் தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் ராஜா கட்டுப்பாட்டில்தான் இருந்தார் ரவி.  ஜெயம் ரவியை ஒருதலையாக காதலித்து வந்த தயாரிப்பாளர் சுஜாதாவிஜயகுமாரின் மகள் ஆர்த்தி ரவியை சிங்கப்பூர் பயணத்தின் போது அறிமுகம் செய்தவர் நடிகை குஷ்பு.  ரவி – ஆர்த்தியின் காதலுக்கு உதவி செய்த குஷ்புவே இருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்திருக்கிறார்.  

மாமியாரின் கட்டுப்பாடு? 

திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக மாமியார், மனைவி கட்டுப்பாட்டில் சென்றதாக ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார்.  இதனால் தனது சொத்துக்கள் பெரும்பாலும் ஆர்த்தி பெயரில்தான் உள்ளது என்று கூறும் அவர்,  ரவியின் சமூகவலைத்தள  கணக்குகளும், வங்கிக்கணக்குகளும் ஆர்த்தியின் செல்போனை வைத்தே இயங்குவகவும், தான் எவ்வளவு பணம் எடுத்தாலும் ஆர்த்திக்கு மெசேஜ் சென்றிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.   உடனுக்குடன் இதை ரவியிடம் கேட்டு டார்ச்சர் செய்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.  மேலும், ரவி சொன்னது உண்மைதானா என்பதை அவரது உதவியாளர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆர்த்தி.  இது ரவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மாமியாரின் தயாரிப்பில் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்று கண்டீஷன் போட்டு அடங்கமறு, பூமி என்று வரிசையாக படம் எடுத்து எல்லா படங்களுமே நஷ்டம் என்று பொய்க்கணக்கு காட்டியதாகவும் ஜெயம் ரவிக்கு சந்தேகம் வந்து ஆராய்ந்த போதுதான் அது பொய்க்கணக்கு என்பது ரவிக்குக் தெரியவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தன் அண்ணன் ராஜாவுக்கு தனி ஒருவன் -2க்கே கால்ஷீட் கொடுக்க முடியாதபடி முழுவதுமாக ரவியை ஆர்த்தியின் குடும்பம் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.  சுஜாதா விஜயகுமார்தான் ரவியின் கால்ஷீட்களை பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.  இதுவே ரவிக்கு பெரும் தலைவலியாக இருந்தததாம்.

டார்ச்சர்?!

’பிரதர்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளி ஊரில் ஓட்டலில் தங்கி இருக்கும் போது திடீரென்று இரவில் வீடியோ கால் செய்து, அறையில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று காட்டச்சொன்னாராம் ஆர்த்தி. தான் சம்பாதித்தது எல்லாம் ஆர்த்தியின் பெயரில் வீடு, நகைகள், கார்கள் என்று இருப்பதாக கூறும் ஜெயம் ரவி,  அப்படி இருக்கும் போதும் வேலை ஆட்களுக்கு இருக்கும் மரியாதை கூட மாமியார் வீட்டில் தனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.  மற்றவர்கள் முன்பாக மாமியாரும், மனைவியும் சத்தம் போட்டு தன்னை கோபமாக பேசியதாகவும்,  அது எல்லாம் தனது அவமானமாக இருந்தது என்றும் கூறும் அவர் தனது விவாகரத்திற்கான காரணங்களாக பிரபல யூடியூபர்களை சந்தித்து சொல்லி வருகிறார்.

மேலும் படிக்க | ஜெயம் ரவி-ஆர்த்தி பிரிவிற்கு காரணமான பிரபல பாடகி?! யார் அவர்?

கெனிஷாவுடன் ஆன உறவு:

பாடகி கெனிஷாவுன் உறவில் இருக்கிறார் ரவி என்று ஆர்த்தி தரப்பு  வெளியிட்ட செய்திகளால் ஆத்திரமடைந்துதான் ஆர்த்தி மீதான குற்றச்சாட்டுகளை ஜெயம் ரவி அடுக்கி வருவதாக கூறப்படுகிறது . பாடகி கெனிஷா ஒரு ஹீலர் என்பதால்,  மன பாதிப்புக்கு சிகிச்சைக்காகத்தான் அவரிடம் சென்றதாகவும் சென்னையில் சிகிச்சை எடுத்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்பதால்தான் கோவா சென்று கெனிஷாவிடம் சிகிச்சை எடுத்ததாகவும் சொல்கிறார் ஜெயம் ரவி. நானும் 2 குழந்தைகளும் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆர்த்தி சொன்னது பொய் என்கிறார் ரவி.

மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை இல்லாததால் வெளியே வந்து அலுவலகத்திலும், நண்பர்கள் வீடுகளிலும், ஓட்டல்களிலும் வாழ்ந்து வந்தபோது, பிரபல தனியார் ஓட்டலில் அறை எடுத்து அங்கே பிறந்தநாள் காணும் தன் மகனை அழைத்து வரச்சொல்லி காலை முதல் மாலை வரை காத்திருக்கையில் மகனை அழைத்துக்கொண்டு ஆர்த்தி இலங்கை சென்றது தெரியவந்ததும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றதாக ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News