கேஜிஎப் இயக்குநருடன் கூட்டணி போட்ட ஜூனியர் என்டிஆர் - அப்பேட் இதுதான்

கேஜிஎப் இயக்குநருடன் ஜூனியர் என்டிஆர் குடும்பத்துடன் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 8, 2022, 12:36 PM IST
  • பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படம்
  • ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல்
  • விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியீடு
கேஜிஎப் இயக்குநருடன் கூட்டணி போட்ட ஜூனியர் என்டிஆர் - அப்பேட் இதுதான் title=

கேஜிஎப் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகின்றன. மெகாஹிட்டான இருப்படங்களும் வசூலில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டன. ஆர்ஆர்ஆர் ஆயிரத்து 300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் நிலையில், கேஜிஎப் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. குறிப்பாக, பாலிவுட்டில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இதனால், ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் என இரு படக்குழுவினருமே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றன.

இந்த படங்களுக்குப் பிறகு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் அடுத்த யார் படங்களில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல், இயக்குநர்களான ராஜமௌலி மற்றும் பிரசாந்த் நீல் அடுத்து யாரை வைத்து இயக்குவார்கள் என்ற  எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது குறித்து இப்போது சுடச்சுட அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிது. பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஏகே 62-ல் வில்லனாக நடிக்கிறேனா? விஜய்சேதுபதியின் பதில்

படத்திற்கான ஸ்கிரிப்ட் ஏற்கனவே தயாராக இருக்கும் நிலையில், பிரசாந்த் நீல் கதை குறித்து ஜூனியர் என்டிஆரிடம் தெரிவித்துள்ளார். அவருக்கும் இந்தக் கதை பிடித்ததால் ஒகே சொல்லிவிட்டாராம். ஏற்கனவே கமிட்டான புராஜெக்ட்டுகள் மற்றும் மற்ற வேலைகளை முடித்தபிறகு இருவரும் புதிய படத்தில் இணைய இருக்கிறார்களாம். அதற்கான முன்னோட்ட பணிகள் முடிந்துவிட்டதால், அறிவிப்பு மட்டும் வெயிட்டிங்கில் இருக்கிறது. 

பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் அண்மையில் திருமண நாளைக் கொண்டாடினர். இருவரும் ஒரே இடத்தில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களை ஜூனியர் என்டிஆர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதுடன், விரைவில் படத்திற்கான அப்டேட்டை வெளியிடுங்கள் என வலியுறுத்த தொடங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | விஜய் வந்தால் மட்டும் போதும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News