சினிமாவில் நடிப்பேன்; கதை முக்கியம்- சௌந்தர்யா!!

Last Updated : Jul 19, 2017, 03:35 PM IST
சினிமாவில் நடிப்பேன்; கதை முக்கியம்- சௌந்தர்யா!! title=

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:- 

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி உள்ளேன். இதில் தனுஷ், அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற வலுவான கதாபாத்திரத்தில் கஜோல் வருகிறார். அதிரடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.

அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வம் அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும்.

கமல்ஹாசன் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் கண்டிப்பாக நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News