சினிமா கலைஞர்கள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

Last Updated : Dec 23, 2016, 02:53 PM IST
சினிமா கலைஞர்கள்  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி title=

இன்று தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் திரை உலக கலைஞர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். 

ஜெயலலிதா நினைவிடத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் திரை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான திரை உலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

கலைப்புலி தாணு இதைக்குறித்து கூறியதாவது:-

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்துக்கும், திரைப்பட உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு. அதை ஈடுசெய்ய தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கூறினார்.

இயக்குனர் விக்ரமன் கூறியதாவது:- 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு திரைப்பட துறை திரை உலக தொழிலாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவருடைய ஆன்மா சாந்தி அடைய திரைப்பட தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி இருக்கிறோம் என்றார்.

Trending News