இசக்கியை ஏற்று கொள்ள முடிவு செய்யும் முத்துப்பாண்டி! தங்கைகளுக்காக மனம் மாறும் ஷண்முகம்!

Anna Serial Update: பரணி கொடுத்த வார்னிங்.. நடுநடுங்கிய சௌந்தரபாண்டி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2024, 12:40 PM IST
  • பரணி கொடுத்த வார்னிங்..
  • நடுநடுங்கிய சௌந்தரபாண்டி! நடந்தது என்ன?
  • அண்ணா சீரியல் அப்டேட்
இசக்கியை ஏற்று கொள்ள முடிவு செய்யும் முத்துப்பாண்டி! தங்கைகளுக்காக மனம் மாறும் ஷண்முகம்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கு சௌந்தரபாண்டியன் திட்டம் தான் காரணம் என்ற உண்மையை பரணியிடம் கூறினார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான அண்ணாவின் நேற்றைய எபிசோட்டில் பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி மாத்தி குடிச்சிட்டா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். 

இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிவபாலனை  அனுப்பி விட்டு நேராக வீட்டிற்கு வருகிறாள் பரணி. நேராக வீட்டிற்கு வந்து பாண்டியம்மா முடியை பிடித்து இழுத்து நீ வந்ததுக்கு அப்புறம் தான் இவ்வளவு பிரச்சனை என்று ஆவேசப்படுகிறாள். சௌந்தரபாண்டி பரணியை தடுத்து நிறுத்தும்போது, திட்டுகிறாள்.

கனியை கொல்ல முயற்சி செய்தது நீங்க தான் என்ற விஷயம் ஷண்முகத்திற்கு தெரிந்தால் உங்க ஒருத்தனையும் உயிரோட விட மாட்டான் என்று எச்சரித்து செல்கிறாள்.

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி, பாண்டியம்மா ஆகியோர் பரணி சொல்றதும் சரி தான் என்று சொல்கிறார்கள், முத்துபாண்டியிடம் இப்போதைக்கு இசக்கியை நீ ஏத்துக்கறதா சொல்லு என்று சொல்கின்றனர். இங்கே ஷண்முகம் சாப்பிடாமல் இருக்க பரணி அவனை திட்டி சாப்பிட சொல்ல அவன் வேண்டாம் என்று மறுக்கிறான். 

மேலும் படிக்க | “விஜய்னாவுடன் போட்டியிட நான் என்ன லூசா?” உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

இதனால் பரணி சரி நீ முத்துபாண்டியை கொன்னுட்டா உனக்கு என்ன அவார்டா தர போறாங்க, ஜெயில்ல தான் போடுவாங்க. அப்புறம் உன் 4 தங்கச்சிங்க நிலைமை என்ன என்று கேட்கிறாள். அப்போதும் ஷண்முகம் சாப்பிடாமல் இருக்க பரணி கனியை கை காட்டி ஹாஸ்ப்பித்திரி வரைக்கும் போய்ட்டு வந்தவ, நீ சாப்பிடாமல் சாப்பிட மாட்டேனு பச்ச தண்ணி கூட குடிக்காமல் இருக்கா என்று சொன்னதும் ஷண்முகம் தங்கைகளுக்காக சாப்பிட மறுபக்கம் முத்துப்பாண்டி இசக்கியை ஏற்று கொள்ள முடிவு செய்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News