ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி!

Director Sandeep Reddy Vanga: இந்தியாவில் தனது படங்கள் வேலை செய்யவில்லை என்றால் நான் ஹாலிவுட்டுக்கு செல்வேன் என்று இயக்குனர் சந்தீப் ரெட்டி கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 18, 2024, 10:23 AM IST
  • அனிமல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • கிட்டத்தட்ட 900 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
  • ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி! title=

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அனிமல் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.  கிட்டத்தட்ட 900 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை செய்தது.  திரையரங்கு தவிர அனிமல் படம் நெட்ஃபிளிக்ஸிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த அனிமல் திரைப்படத்தில் அதீத வன்முறை, பெண்கள் மீது வெறுப்பு மற்றும் பெண்களை மோசமாக சித்தரிப்பதாக பலவித நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தபோதிலும், சமீபத்தில் நடந்து முடிந்த 2024 ஃபிலிம்பேர் விருதுகளில் அனிமல் படம் ஐந்து விருதுகளை வென்று இருந்தது.  விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் சந்தீப் ரெட்டி வாங்கா.  இந்த படமும் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  

மேலும் படிக்க | பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா 2! இந்தியாவில் ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிறகு பாலிவுட்டில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை கபீர் சிங் என்ற பெயரில் ஷாஹித் கபூரை வைத்து இயக்கி இருந்தார்.  தற்போது அனிமல் படத்தின் மூலமும் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.  இந்நிலையில், இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா கொடுத்த பழைய நேர்காணலில், தனது படங்கள் இந்தியாவில் சரியாக போகவில்லை என்றால் ஹாலிவுட்டுக்கு சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “என்னால் இந்தியாவில் படம் இயக்க முடியவில்லை என்றால் நான் ஹாலிவுட்டுக்கு செல்வேன். எனக்கு மொழி ஒரு தடையாக இருக்காது. தெலுங்கு, தமிழ் தவிர போஜ்புரி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பிற மொழிகளில் படங்களை இயக்குவேன்" என்று கூறினார்.

மேலும் தன்னை பற்றியும், தன் படங்கள் பற்றியும் வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போது சந்தீப் ரெட்டி வாங்கா சில சமயங்களில் கோபமாக பதில் அளிப்பார். ஜாவேத் அக்தரின் கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், “அவர் படத்தைப் பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் முழுப் படத்தையும் பார்க்கவில்லை என்பது அந்தக் கமெண்டில் தெளிவாகத் தெரிகிறது. இப்போது படம் பார்க்காமல் யாராவது பேசிக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது? வெளிப்படையாக, எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை, ஏனென்றால் அவர் படத்தைப் பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, அவரைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு படைப்பின் மீது கற்களை வீசும் யாரும், ஏன் அவர்களை முதலில் சரிசெய்து கொள்வதில்லை?" என்று கூறினார்.

மேலும், “மிர்சாபூர் படத்தை இயக்கும் போது ஃபர்ஹான் அக்தரிடம் இதை யாரும் சொல்லவில்லை. துனியா பார் கே காலி மிர்சாபூர் ஏக் ஷோ மாய் ஹை மற்றும் நான் முழு நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. அந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, ​​அதைப் பார்த்தால் உங்களுக்குப் வாந்தி வருவது போல் இருக்கும். அவர் ஏன் தனது மகனின் வேலையைச் சரிபார்க்கவில்லை? என்று கூறினார். அனிமல் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது பிரபாஸை வைத்து அவர் இயக்க உள்ள ஸ்பிரிட் படத்திற்கான வேளைகளில் பிசியாக உள்ளார்.  இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News