ஹீரோ பில்டப்பில் கதையை கோட்டை விட்ட புஸ்பா! படம் எப்படி இருக்கு?

சுகுமார் இயக்கத்தில் அல்லுஅர்ஜூன் நடித்த புஸ்பா பாகம் 1 படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 17, 2021, 11:40 AM IST
ஹீரோ பில்டப்பில் கதையை கோட்டை விட்ட புஸ்பா!  படம் எப்படி இருக்கு? title=

அல்லுஅர்ஜூன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அலவைகுண்ட புரம்லோ மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழில் டப் செய்து தொலைக்காட்சியில் வெளியிட்ட போதிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது.  இதனை அடுத்து அவர் நடிக்கும் அடுத்த படமான புஷ்பா திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டது.  புஸ்பா படத்தில் அல்லுஅர்ஜூன் கெட்டப், கேஸ்டிங், பாடல்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது.  ஆந்திராவை தாண்டி தமிழகத்திலும் புஸ்பா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  இன்று 5 மொழிகளில் புஸ்பா திரைப்படம் வெளியாகி உள்ளது.  

சந்தன மரம் கடத்தும் லாரி டிரைவராக இருந்து அந்த கும்பலில் தலைவனாக ஹீரோ எப்படி வளர்கிறார் என்பதே புஸ்பா படத்தின் ஒன்லைன்.  இதனை இயக்குனர் சுகுமார் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு முதல் பாகம் தற்போது வெளியாகி உள்ளது.  ஹேர்ஸ்டைல், பாடி லேங்குவேஜ், பேச்சு என ஒரு நிஜ லாரி டிரைவராகவே வாழ்ந்துள்ளார் அல்லுஅர்ஜூன்.  அவரது உழைப்பு படம் முழுக்க தெரிகிறது.  ஆனால் அதில் பாதி அளவு உழைப்பை சிறிது கதையிலும் இயக்குனர் காமித்து இருக்கலாம்.  படம் முழுக்க ஹீரோ பில்டப் காட்சிகளே அதிகமாக உள்ளது.  தமிழில் வந்த கைதி படத்தினை போல் சண்டை காட்சிகளை வைத்து கதையை நகர்த்த முயற்சி செய்து அதில் தோற்றுள்ளார்கள் படக்குழு.  சந்தன மர கடத்தல் எப்படி நடக்கிறது என்று காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தாலும் இன்னும் சிறிது கூடுதல் தகவல்களுடன் சொல்லி இருக்கலாம்.  

pushpa

போலீஸ் லாரியை பின்னல் இருந்து சேஸ் செய்யும் போது சில நிமிடங்களில் அவளோ பெரிய லாரியை காட்டுக்குள் மறைக்கிறார் அல்லுஅர்ஜூன்.  பெரிய படைகளை வைத்துள்ள போலீஸ் சில நிமிடங்களில் அதனை கண்டுபிடித்து இருக்கலாம்.  ஆனால் அதனை செய்யாமல் அங்கேயும் ஹீரோக்கு பில்டப் காட்சிகளோடு படம் நகர்கிறது.  அதற்க்கு அடுத்த காட்சியில் அவளோ எண்ணிக்கையில் உள்ள மரக்கட்டைகளை தண்ணீரில் தள்ளிவிட்டு தப்பிப்பது எல்லாம் என்ன லாஜிக் என்று தெரியவில்லை.  

ஹீரோயினாக ராஸ்மிகா ஏன் இந்த கதையை தேர்ந்தெடுத்தார் என்ற குழப்பம் படம் ஆரம்பத்தில் இருந்தே வருகிறது.  முதல் பாதியில் டம்மி செய்யப்பட்டு இருக்கிறார், இரண்டாம் பாதியில் ஏன் வருகிறார் என்று அவருக்கே தெரியவில்லை.  வில்லன்களாக வரும் அனைவருமே தமிழ் ரசிகர்களுக்கு புதிய முகங்களாகவே தெரிகின்றனர்.  கடைசியில் வரும் பகத் பாசில் ஆரம்பத்தில் சிறிது பயத்தை ஏற்படுத்தினாலும், அவரும் கடைசியில் டம்மி செய்யப்படுகிறார்.  ஒருபாடலுக்கு வந்தாலும் சமந்தாவின் வருகை திரையரங்கை ஆர்ப்பரிக்கிறது.  ஓ சொல்றியா மாமா மற்றும் சாமி பாடல் மட்டுமே கேக்கும் அளவிற்கு இருக்கிறது.  மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை தமிழுக்கு செட் ஆகவில்லை.  தமிழில் நேரடி ரிலீஸ் என்று சொல்லி டப்பிங் படமாகவே எடுத்துள்ளனர்.  இதனால் யாருக்குமே லிப்சிங் சரியாக ஒட்டவில்லை.  கதையில் கூடுதலாக சுவாரஸ்ய காட்சிகள் சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்து இருக்கும் இந்த புஸ்பா.

ALSO READ | அமுக்கு டுமுக்கு அமால் டுமால் - DON படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News