விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்

Ajith Kumar Vidaa Muyarchi Shooting Schedule Update: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 26, 2023, 10:46 AM IST
  • அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.
  • படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற உள்ளது.
  • நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல் title=

விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட்: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. 

விடாமுயற்சி திரைப்படம்:
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். இது இவர்கள் இணையும் ஐந்தாவது படமாகும். மேலும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் வில்லனாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்கள் என முதலில் கூறப்பட்டது. அனால், இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் இல்லாமல் அவருக்கு பதிலாக பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஆரவ் முதல் வில்லனாகவும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இரண்டாவது வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார்கள். அதேபோல் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படத்திற்கு பின் தற்போது இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார், நீரவ் ஷா. இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பிரபல முன்னணி ஒளிபதிவர்களில் ஒருவர் ஆவார்.

மேலும் படிக்க | உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..?

ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள்:
இதனிடையே இந்த திரைப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில், வரும் அக்டோபர் 4 ஆம் தேதியில் இருந்து அபுதாபியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான பட குழுக்கான டிக்கெட் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து 40 நாட்கள் படபிடிப்பு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் டெக்னிகல் துறை கலைஞர்கள் கடந்த 24ஆம் தேதி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர். மேலும், படத்தில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆசியாவில் பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த செய்து வெளியானதால் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்:
இந்த திரைப்படம் ஷெட்யூல் செய்த நேரத்தில் நிறைவு பெற்றால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: மாயாவை விரட்டியடிக்க அன்னலட்சுமி போட்ட ஐடியா.. நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News