முன்ஜாமின் கோரி SV.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு!

நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

Last Updated : Apr 23, 2018, 08:30 PM IST
முன்ஜாமின் கோரி SV.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு!  title=

நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒருவர் போட்ட பதிவை தாம் தவறாக பகிர்ந்து விட்டதாகவும், அதற்காக அனைத்து பெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இதை தொடர்ந்து அவர் மீது தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் எஸ்.வி.சேகர் தற்போது தலைமறைவாகியுள்ளார். 

போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்ததாக தகவல் தெரிவித்தது. இதையடுத்து  எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Trending News