CRPF வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!

நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹரிஷ் கல்யாண் தூத்துக்குடியில் உள்ள தியாகி சுப்ரமணியன் சமாதிக்கு நேரில் சென்ரில் மரியாதை செலுத்தினார் .

Last Updated : Feb 25, 2019, 04:56 PM IST
CRPF வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி! title=

நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹரிஷ் கல்யாண் தூத்துக்குடியில் உள்ள தியாகி சுப்ரமணியன் சமாதிக்கு நேரில் சென்ரில் மரியாதை செலுத்தினார் .

கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் (கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன்) சேர்ந்தவர்கள்.

அந்தவகையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் சுப்பிரமணியனின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 1 லட்சம் காசோலை அளித்துள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 

Trending News