2 மாத சிறைவாசத்துக்கு பிறகு நடிகர் திலீப் வெளியே வந்தார்

Last Updated : Sep 6, 2017, 09:14 AM IST
2 மாத சிறைவாசத்துக்கு பிறகு நடிகர் திலீப் வெளியே வந்தார்  title=

கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி அதிரடியாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சிறைவாசம் அனுபவித்து வரும் திலீப் அங்கமாலி கோர்ட் மற்றும் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக திலீப்புக்கு 2 மணிநேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 58 நாட்களுக்குப் பிறகு திலீப் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News