ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 2.5 லட்சத்தை வட்டியாகவே பெறலாம்... அசத்தல் திட்டம்!

Post Office Time Deposit Scheme: தபால் அலுவலக நேர வைப்புத்தொகை திட்டத்தில் நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால், வட்டி மட்டும் அதில் இருந்து ரூ. 2.5 லட்சத்தை பெறலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2023, 11:39 PM IST
  • இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருகின்றனர்.
  • ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 2.5 லட்சத்தை வட்டியாகவே பெறலாம்... அசத்தல் திட்டம்! title=

Post Office Time Deposit Scheme: தபால் அலுவலகம் சிறு சேமிப்புத் திட்டங்களின் பல திட்டங்களை இயக்குகிறது. ஒரு முதலீட்டாளர் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டம் ஒரு சிறந்த வழி.

இது வங்கியின் நிலையான வைப்புத்தொகை போன்றது. இருப்பினும், நான்கு வெவ்வேறு காலங்களுக்கு மட்டுமே பணத்தை இதில் டெபாசிட் செய்ய முடியும். POTD, அதாவது தபால் அலுவலக நேர வைப்புத் தொகையை 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு திறக்கலாம். வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால், வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படுகிறது.

7.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்

இந்தியா போஸ்ட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 1 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 6.8 சதவீத வட்டியும், 2 ஆண்டு கால டெபாசிட்டில் 6.9 சதவீதமும், 7 சதவீத வட்டியும் கிடைக்கிறது. மூன்று ஆண்டு காலத்தில் சதவீதம் 7 சதவீதம் மற்றும் 5 ஆண்டு காலத்தில் 7.5 சதவீதம், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?

ரூ. 5 லட்சத்துக்கு ரூ. 2.25 லட்சம் வட்டி

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின்கீழ், 5 வருட கால டெபாசிட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ் கால்குலேட்டரின்படி, ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், அவருக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 974 வட்டி கிடைக்கும். CAGR எனப்படும் ஆண்டு சராசரி வருமானம் 7.71 சதவீதமாகும். ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு, அசல் தொகையான ரூ. 5 லட்சத்தையும் நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

- தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு வங்கி நிலையான வைப்புத்தொகை போன்றது. இதில், காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் திருத்தம் செய்யப்படுகிறது. இது 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு திறக்கப்படலாம்.

- இது குறைந்தபட்ச வட்டி 6.8 சதவீதம் மற்றும் அதிகபட்ச வட்டி 7.5 சதவீதம் வழங்குகிறது. இது வங்கிகளின் சராசரி வருமானத்தை விட அதிகம்.

- வட்டி விகிதத்தின் திருத்தம் காலாண்டு அடிப்படையில் செய்யப்படுகிறது. வங்கியின் நிலையான வைப்புத்தொகை விகிதம் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை பெருமளவு சார்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் முடிவு எடுக்கும்.

- தபால் அலுவலக நேர வைப்பு கணக்கை முதிர்ச்சிக்கு முன் மூடுவதும் செய்யப்படலாம்.

- தபால் அலுவலக நேர வைப்பு கணக்கையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீட்டிக்க முடியும். இது தவிர, அவசர நிதியை தேவைப்படும் நேரத்தில் அடகு வைத்தும் ஏற்பாடு செய்யலாம்.

மேலும் படிக்க | Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News