பட்ஜெட் 2022: எதன் விலை உயர்ந்தது? எது மலிவானது

Budget 2022: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 04:28 PM IST
  • சம்பளம் பெறும் வகுப்பினருக்கான பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை
  • பட்ஜெட்டுக்கு பிறகு சில பொருட்கள் மலிவாகவும், சில விலை உயர்ந்ததாகவும் இருக்கும்
  • மொபைல் சார்ஜர் மற்றும் விவசாய பொருட்கள் மலிவாக இருக்கும்
பட்ஜெட் 2022: எதன் விலை உயர்ந்தது? எது மலிவானது title=

புதுடெல்லி: Budget 2022: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது சமநிலை பட்ஜெட் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், முழு பட்ஜெட்டிலும், சம்பள வகுப்பை மனதில் வைத்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நிதியமைச்சரின் பட்ஜெட்டை தாக்கல் (Union Budget 2022) செய்த பிறகு, சில விஷயங்கள் மலிவாகவும், சிலவை விலை உயர்ந்ததாகவும் உள்ளது.

சில பொருட்களின் மீது சுங்க வரி குறைப்பு
பொது வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு, எந்தெந்த விஷயங்களுக்கு முன்பை விட அதிகமாகச் செலுத்த வேண்டும். அதன்படி அனைத்து பொருட்களுக்கான சுங்க வரி, இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் அதிகரிப்பது மற்றும் குறைப்பது குறித்து நிதியமைச்சர் (FM Nirmala Sitharaman) உரையாற்றினார். எது மலிவானது, எது விலை உயர்ந்தது என்பதை பார்போம். 

ALSO READ | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?

மலிவானது
- மொபைல் சார்ஜர் மலிவாக இருக்கும்
- விவசாயப் பொருட்கள் மலிவாக இருக்கும்
- வைர நகைகள் மலிவாக இருக்கும்
- காலணிகள் மற்றும் செருப்புகள் மலிவானதாக இருக்கும்
- வெளிநாட்டில் இருந்து வரும் இயந்திரங்கள் விலை குறைவாக இருக்கும்
- மொபைல் போன்கள், ஜவுளி
- MSME களுக்கு உதவும் வகையில், ஸ்டீல் ஸ்கிராப் மீதான சுங்க வரி விலக்கை ஓராண்டுக்கு நீட்டிப்பதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். 
- மெந்தா எண்ணெய் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

எது விலை அதிகம்
இறக்குமதி வரி விலக்கை நீக்கி, மூலதனப் பொருட்களுக்கு 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. போலி நகைகளின் இறக்குமதியை குறைக்கும் வகையில் அவற்றின் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடையும் விலை அதிகமாக இருக்கும்.

ALSO READ | Cryptocurrency: கட்டுப்பாடா? தடையா? இந்திய அரசின் முடிவு என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News