SBI எச்சரிக்கை; இதை செய்யவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும்

PAN-Aadhaar Link: மார்ச் 31 ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பான்-ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால், அவர்களின் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2022, 12:27 PM IST
  • மார்ச் 31க்குள் பான் ஆதார் இணைப்பை இணைக்க வாய்ப்பு
  • பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம்
  • பான்-ஆதார் இணைக்கப்படாவிட்டால் வங்கிச் சேவை தடைபடும்
SBI எச்சரிக்கை; இதை செய்யவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் title=

புதுடெல்லி: PAN-Aadhaar Link: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் 31, 2022க்கு முன் பான்-ஆதார் கார்டை இணைக்குமாறு வங்கி தனது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை நிறுத்தப்படலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக எஸ்பிஐயும் ட்வீட் செய்துள்ளது.

மார்ச் 31 வரை வாய்ப்பு
SBI கூறியதாவது, 'எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு (Aadhaar PAN Link) நாங்கள் அறிவுறுத்துகிறோம், இதனால் எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்கவும் மற்றும் தடையற்ற வங்கி (State Bank Of India) சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும். இதனுடன், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்று வங்கி தெரிவித்துள்ளது. பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பான் செயலிழந்துவிடும் மற்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணைப் பயன்படுத்த முடியாது.

ALSO READ | SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! வங்கியின் இந்த புதிய சேவை சூப்பர்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 30 செப்டம்பர் 2021 முதல் மார்ச் 31, 2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

பான்-ஆதார் கார்டை இணைப்பது எப்படி

முதல் வழி
1- முதலில் நீங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் https://www.incometaxindiaefiling.gov.in/home
2- இங்கே இடது பக்கத்தில் Link Aadhaar என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்
3- ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் PAN, AADHAAR மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயரை நிரப்ப வேண்டும்.
4- உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், 'I have only year of birth in aadhaar card' என்ற விருப்பத்தை டிக் செய்யவும்.
5- கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும் அல்லது OTPக்கு டிக் செய்யவும்
6- ஆதார் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பைப் பெற்றுள்ளீர்கள். 

இரண்டாவது வழி
SMS மூலமாகவும் PAN மற்றும் Aadhaar இணைக்கலாம்
- மொபைலின் செய்தி பெட்டியில், -UIDPAN<12-digit Aadhaar><10-digit PAN> என டைப் செய்யவும்.
- இந்த செய்தியை 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும், உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பைப் பெற்றுள்ளீர்கள்.

ALSO READ | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வங்கியும் FD வட்டி விகிதத்தை அதிகரித்தது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News