SBI Alert: ஜூலை 1 முதல் மாறுகின்றன பல விதிகள், முழு விவரம் இதோ!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஜூலை 1, 2021 முதல் பல விதிகளை மாற்றப்போகிறது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். ஆகையால் இவற்றைப் பற்றி SBI வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2021, 07:06 PM IST
  • ஜூலை 1 முதல் SBI-யின் பல விதிகள் மாறவுள்ளன.
  • SBI அதன் ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை மாற்றியுள்ளது.
  • மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகங்களில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
SBI Alert: ஜூலை 1 முதல் மாறுகின்றன பல விதிகள், முழு விவரம் இதோ!!  title=

SBI Big News: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஜூலை 1, 2021 முதல் பல விதிகளை மாற்றப்போகிறது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். ஆகையால் இவற்றைப் பற்றி SBI வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும். 

புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏடிஎம்-மில் பணத்தை எடுப்பது மற்றும் காசோலை புத்தகத்தின் பயன்பாடு ஆகியவற்றுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும். SBI அதன் ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை மாற்றியுள்ளது. 

SBI வலைத்தளத்தின்படி, காசோலை புத்தகம், பண பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்கள் பொருந்தும். இந்த புதிய சேவை கட்டணம் SBI அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும்.

BSBD கணக்கு என்றால் என்ன?

SBI BSBD கணக்கு பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்காகும் (Zero Balance Saving Account). இத்தகைய கணக்குகள் ஏழைக் குடும்பங்களுக்கானவை. வழக்கமான சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு அளிக்கப்படுவது போலவே வங்கி, பூஜ்ஜிய இருப்பு கணக்குகளுக்கும் அதே அளவிலான வட்டியை அளிக்கின்றது. 

காசோலை புத்தகத்தில் இந்த அளவுக்கு கட்டணம் அதிகரித்தது

SBI BSBD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 காசோலைகள் கிடைக்கின்றன. இப்போது 10 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 10 காசோலைகளுக்கு வங்கி ரூ .40 மற்றும் ஜி.எஸ்.டி-ஐ வசூலிக்கும். 25 காசோலைகளுக்கு ரூ .75 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். அவசர காசோலை புத்தகத்தின் 10 காசோலைகளுக்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) காசோலை புத்தகங்களில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ALSO READ: Bank Holiday Alert: இந்த மாநிலங்களில் வங்கிகள் 4 நாட்களுக்கு மூடப்படும்

SBI வங்கி ஏ.டி.எம்-மில் இருந்து பணம் எடுக்கும் முறை 

SBI BSBD கணக்கு உள்ளவர்களுக்கு 4 முறை இலவசமாக பணம் எடுப்பதற்கான வசதி கிடைக்கிறது. வங்கிக் கிளைகளுக்கு அருகில் உள்ள ஏடிஎம்களில் (SBI ATM) செய்யப்படும் பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும். இலவச வரம்பு முடிந்துவிட்டால், வங்கி, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிக் கிளை அல்லது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க வங்கி ரூ .15 மற்றும் ஜிஎஸ்டி-ஐ வசூலிக்கிறது.

எஸ்பிஐ-யிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பணத்தை எடுக்கும் வரம்பை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து, மற்ற வங்கிக் கிளைகளிலிருந்து, வித்ட்ராயல் படிவம் மூலம் ரூ .25,000 வரை பணம் எடுக்கலாம். மற்ற கிளைகளிலிருந்து காசோலை மூலம் இப்போது ரூ .1 லட்சம் வரை எடுக்க முடியும். மூன்றாம் தரப்பு (யாருக்கு காசோலை வழங்கப்படுகிறதோ) பணம் எடுக்கும் வரம்பு ரூ .50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ: ATM Fraud: சென்னை SBI ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடியவர்களில் ஒருவர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News