விவாகரத்துக்கான விசித்திரமான காரணங்கள்! இது இந்தியாவில் தான்

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள், பெரும்பாலான பயிர்கள் செழித்து வளரும், சில மணங்கள் மலர்வதில்லை அவை வாடி விடுகின்றன...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2021, 11:39 PM IST
  • விவாகரத்துக்கான வித்தியாசமான காரணங்கள்
  • இது இந்தியாவின் விவாகாரத்துக்கான ஆணிவேர்
  • அடிப்படை ஆட்டம் கண்டால் திருமண வாழ்க்கை ஆடிப் போகிறது
விவாகரத்துக்கான விசித்திரமான காரணங்கள்! இது இந்தியாவில் தான் title=

திருமணம் என்ற வார்த்தையே பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால், சிலருக்கோ எரிச்சலைக் கொடுத்திருக்கும். சிலர் சமூகத்திற்கு திருமணம் நல்லது என்று சொன்னால், சிலர் சிக்கலானது என்று சொல்வார்கள்.

சிலர் திருமண பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்தால், வெகுசிலர் மன நிம்மதியை கெடுக்கும் பந்தம் வேண்டாம் என்ற முடிவையும் எடுக்கின்றனர்.  திருமணங்களில் வெற்றியும் தோல்வியும் ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். 

ஆனால், விவாகரத்து கோருவதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட்வர்கள் சொல்லும்போது ‘அட, இதுக்கா, விவகாரத்து?’ என்று ஆச்சரியம் ஏற்படும். இந்தியாவில் விவகாரத்துக்கான சில காரணங்களைக் கேட்டால் சாதாரண மக்களுக்கு அப்படித்தான் தோன்றும்.

என் கணவர் வழுக்கை. என் மனைவி தினமும் குளிப்பதில்லை. என் கணவர் என்னை மிகவும் நேசிக்கிறார்... இவை வெறும் குறைகள் அல்ல! இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களிடமிருந்து விவாகரத்து கோரும் போது, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சொல்லும் காரணங்கள் தான் இவை.

திருமணங்கள் சொர்க்கத்தில் முடிவு செய்யப்படலாம், ஆனால் நீடித்து இருக்க வேண்டியது என்னவோ தம்பதிகளுக்கு இடையில் தான். ஆனால், அவர்களுக்கு இடையில் இடைவெளி ஏற்பட்டால், சொர்க்கத்தில் முடிவான திருமணத்தை நரகமாகனதாக அவர்கள் நினைக்கத் தொடங்கிவிடுகின்றனர். நரகத்தில் ஏன் உழல வேண்டும்? பிரிந்து செல்வது சில நேரங்களில் ஒரே வழி என்று நினைப்பவர்கள் நீதிமன்றங்களை அணுகுகிறர்கள்.   

READ ALSO | 13 வயதில் 41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட பிரபலத்தின் Love Story

விவாகரத்துக்கான காரணங்கள் விசித்திரமான இருந்தாலும், அது காலத்திற்கு ஏற்றவாறு மாறிவருவதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் இந்தியாவில் விவாகரத்து கோரப்பட்ட சில விஷயங்கள் இவை தான்!  

அலிகாரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி தினமும் குளிக்காததால் விவாகரத்து கோரினார். தனது திருமணத்தை காப்பாற்ற விரும்பிய மனைவி மகளிர் பாதுகாப்பு அறையில் புகார் அளித்தபோது, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. தினசரி குளிக்காத பிரச்சினையால், வாய்த் தகராறு முற்றிப்போய் மனைவியிடம் இருந்து பிரிந்துவிட கணவர் முடிவு செய்தார்.  

திருமண நாளன்று மாதவிடாய் பற்றி மனைவி வெளிப்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஒருவர் விவாகரத்து பதிவு செய்திருக்கிறர்.21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் மாதவிடாய் என்றால் விலக்க வேண்டிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 

மூடநம்பிக்கைகளை மக்கள் எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தும் இந்த விவாகரத்து வழக்கை பதிவு செய்தவர் வதோதராவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை நிபுணர். திருமண நாளில் மணப்பெண்ணுக்கு மாதவிடாய் இருப்பதை கண்டு அவரும் அவரது தாயும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுடைய 'நம்பிக்கையை அவமதித்ததாகக் கூறி' கணவர் விவாகரத்து கோரியுள்ளார். மெத்தப் படித்தவர்களும் மாதவிடாயை காரணம் காட்டி விவாகரத்து வாங்குவது அதிர்ச்சியை அளிக்கிறது.

கணவர் என்னை மிகவும் நேசிக்கிறார், நாங்கள் சண்டையிட மாட்டோம் என்று கோரி உத்தரப்பிரதேசத்தில் ஒரு மனைவி விவாகரத்து கோரியிருக்கிறார்.அதிக அன்பும் திகட்டிவிடும் போல! இந்த செய்தி இந்தி பத்திரிகையான தைனிக் ஜாக்ரனில் வெளிவந்த்து. கடந்த ஆண்டு இந்த விவாகரத்து விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.திருமணமாகி 18 மாதங்கள் ஆகியிருந்தாலும், கணவருடன் ஒரு சண்டைக்கூட வரவில்லை என்பது "சோர்வளிப்பதாக" அவர் கூறினார்!

READ ALSO | 445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை!

அவர் கூறியது என்ன தெரியுமா? வீட்டு வேலைகளையும் கூட கணவர் பகிர்ந்து கொண்டாராம்! அவருடன் சண்டை போட வேண்டும் என்பதற்காக நான் வேண்டுமென்றே தவறு செய்வேன் என்றும் அவர் சொல்கிறார். "நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் என்னை எப்போதும் மன்னித்துவிடுவார். நான் அவருடன் சண்டை போட விரும்பினேன்," என்று மனைவி கூறியதைக் கேட்ட சம்பல் உள்ள ஷரியா நீதிமன்றதுக்கே குழப்பம் ஏற்பட்டதாம்!

ஆன்லைன் கேமிங் அடிமைத்தனம் பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், விவாகரத்தையும் செய்ய வைக்கும் என்று புரிய வைக்கும் நிகழ்வு இது. அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயது மனைவி, PUBG மீது இருந்த மோகத்தால் கணவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இந்த விவரம் அறிய பெண், ஒரு வயது குழந்தையின் தாய் என்பதும் வருத்தமான விஷயம். தான் விரும்பிய அளவுக்கு PUBG விளையாட கணவர் அனுமதிக்கவில்லை என்று விவாகரத்து கேட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கும், மகளின் செய்கை திருப்தியளிக்கவில்லை.

யாரும் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளாதாதால், விவாகரத்து பெற உதவி கோரி 181 அபயம் மகளிர் உதவி தொலைபேசி எண்ணை அழைத்தார். க்கு அழைத்தபோது வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. "அந்த பெண் 181 க்கு போன் செய்து, தனது கணவருடன் ஒத்துப் போகாததால் செய்யாததால் பெண்கள் கண்காணிப்பு இல்லத்தில் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.  

கணவர் வழுக்கையாக இருப்பதால் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்திற்கு முன் தனது தலை வழுக்கை என்பதை மறைத்த கணவரிடம் இருந்து விவாகரத்து செய்ய வேண்டும் என்று குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்தார். 2020 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளில் கணவர் விக் அணிந்து வழுக்கையை மறைத்துவிட்டார். ஆனால் உண்மை தெரிய வந்தபோது கோபமடைந்த பெண் சொன்ன வார்த்தைகள் இவை. "என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் நான் பலமுறை சங்கடமாக உணர்கிறேன். இனி அவருடன் வாழ்வது எனக்கு கடினம்" என்று மனைவி தெளிவாக கூறிவிட்டார்.

Also Read | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News