இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அமோகமாக இருக்கும்: சதுர்கிரகி யோகத்தால் மகிழ்ச்சி பொங்கும்

Astrology: ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகப் போகிறது. சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். வேலையில் பதவி உயர்வுடன், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2022, 08:45 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் மகத்தான பலன்களைப் பெறுவார்கள்.
  • ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
  • சதுர்கிரஹி யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களைத் தரும்.
இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அமோகமாக இருக்கும்: சதுர்கிரகி யோகத்தால் மகிழ்ச்சி பொங்கும்  title=

ஜோதிட சாஸ்திரப்படி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 3 சுப கிரகங்களின் ராசி மாறப்போகிறது. கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும்போது, பொதுவாக அது பல ராசிக்காரர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மார்ச் 6, ஞாயிறு அன்று புதன் பெயர்ச்சியாகிறது. இதன் பிறகு மார்ச் 15 ஆம் தேதி சூரியன் ராசி மாறுகிறார். அதன்பின் மார்ச் 31ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி பகவான் ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார். 

இந்த நிலையில் சதுர்கிரஹி யோகம் உருவாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால், இந்த சதுர்கிரஹி யோகம் 4 ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். சதுர்கிரஹி யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

3 கிரகங்கள் ராசியை மாற்றும்

மார்ச் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புதன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். பின்னர் மார்ச் 18-ம் தேதி இதே ராசியில் புதன் அஸ்தமிக்கிறார். இதற்குப் பிறகு, மார்ச் 24 அன்று, புதன் கிரகம் மீன ராசியில் மாறுவார். மார்ச் 15 அன்று சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். மார்ச் மாத இறுதியில் அதாவது மார்ச் 31ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இந்த 4 ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், வேலையில் மேஷ ராசிக்காரர்களின் செயல்திறன் நன்றாக இருக்கும். இவர்களுக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இது தவிர வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க | செவ்வாய் ராகுவின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு விபரீதம்: எச்சரிக்கை தேவை

ரிஷபம்: 

இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் லாபம் இருக்கும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

துலாம்: 

உத்தியோகத்தில் பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். மனைவி / கணவனின் முழு ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: 

சதுர்கிரஹி யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களைத் தரும். உத்தியோகம் மற்றும் வேலையில் சாதகமான பலன்கள் உண்டாகும். வருமான ஆதாரம் அதிகரிக்கும். இது தவிர, பல வகைகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News