நீங்களும் ஆகலாம் அம்பானி..! பணக்காரர்கள் கடைப்பிடிக்கும் ‘இந்த’ 5 ரகசியங்கள் தெரிந்தால் போதும்!

பணக்காரர்கள் அவ்வளவு சொத்துக்களை சம்பாதித்து எப்படி என எப்போதாவது யோசித்ததுண்டா..? அவர்கள் அதற்கென்று சில ரகசியங்களை வைத்துள்ளனர். அதை தெரிந்து கொண்டால் நீங்களும் பணக்காரர் ஆகலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Aug 6, 2023, 04:59 PM IST
  • நீங்களும் அம்பானி ஆகலாம்!
  • பணக்காரர்கள் கடைப்பிடிக்கும் 5 ரகசியங்கள்.
  • சேமித்தால் மட்டும் போதாது-முதலீடு செய்ய வேண்டும்.
நீங்களும் ஆகலாம் அம்பானி..! பணக்காரர்கள் கடைப்பிடிக்கும் ‘இந்த’ 5 ரகசியங்கள் தெரிந்தால் போதும்!  title=

செல்வந்தர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது எது? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர்கள் எப்படி பெரும் செல்வத்தை குவித்து தங்கள் நிதி வளத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்? பணக்காரர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்றாலும், பல செல்வந்தர்களுக்கு பொதுவான சில பழக்கங்களும் உத்திகளும் உள்ளன. அவர்களின் வெற்றிக்கு பங்களிக்கும் அத்தகைய 5 ரகசியங்களை இங்கே பார்க்கலாம்.

1.முதல் முதலீடு:

பணக்காரர்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாரோ இல்லையோ, அவர்கள் மீது அவர்களே நிறைய தன்னம்பிக்கையை வைத்திருப்பார்கள். எல்லா பணக்காரர்களும் முதலில் அவர்கள் மீது முதலீடு செய்வார்கள். பணம் மட்டுமே முதலீடு அல்ல, என நம்புபவர்கள் இவர்கள். அவர்களின் திறமை, கைத்தொழில், நேரம் என எல்லாமே அவர்களுக்கு முதலீடுதான். பணத்தை தேவையின்றி செலவு செய்வதை விட, ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதிலோ அல்லது அவர்களின் நலனுக்காக சில விஷயங்களை செய்து கொள்வதற்கோ முதலீடு செய்வர். குறிப்பாக படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறையவே செலவு செய்வர். எவ்வளவு திறன்களை கற்றுக்கொள்ள நினைக்கிறார்களோ அவ்வளவு தூரம் தான் வளருவோம் என்று நம்புபவர்கள் இவர்கள். 

2.தானம் செய்வர்:

ஆம், பணக்காரர்கள் பலர் தானம் செய்வர். தானம் என்றால் நாலு பேருக்கு உணவு அளிப்பது மட்டுமல்ல. அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பது, பண உதவி தேவைப்படுவோருக்கு கை கொடுப்பது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவர். நம் நாட்டிலேயே நிறைய பணக்காரர்கள் பலர் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். ஏதேனும் ஒரு வகையில் இந்த சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான பணக்காரர்கள் தங்களது கணக்கு வழக்குகளில் கண்ணாக இருப்பர். அதனால், எதிலாவது நிதியிழப்பு அபாயம் ஏற்படப்போகிறது என்று தெரிந்தால் அதை முன்கூட்டியே கணித்து சுதாரித்துக்கொள்வர். 

மேலும் படிக்க | மாதம் ரூ. 4,500 போதும்... ஈஸியாக கோடீஸ்வரர் ஆகலாம் - எப்படி தெரியுமா?​
3.சேமித்தல் மட்டும் போதாது:

நம்மில் பலர், எதிர்காலத்திற்காக எப்போதும் சேமித்து வைத்துக்கொண்டே இருப்போம். ஆனால், பணம் சம்பாதிக்க சேமித்து வைத்தல் மட்டும் போதாது. அதை கண்டிப்பாக எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். பணக்காரர்கள் தாங்கள் எதில் முதலீடு செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பர். தேவைப்பட்டால், இவர்கள் முதலீடு செய்யும் துறையில் யார் முன்னோடியாக இருக்கிறார்களோ அவர்களிடம் சென்று உதவி கேட்பர். பணக்காரர்களுக்கு தங்களது சொத்துக்களை வளர்க்க வேண்டும் என்றால் எதில் முதலீடு செய்து எப்படி பணத்தை இரட்டிப்பார்க்கலாம் என்று ஆழ்ந்து யோசிக்க தெரியும். சேமித்தல் நல்லதுதான். ஆனால் சேமித்து மட்டும் வைத்தால் பணம் குட்டி போடாது என்பதும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால், கையில் இருக்கும் பணம் இவர்களுக்கு பன்மடங்காக வளர்ந்துகொண்டே இருக்கும். 

4.தொலைநோக்கு பார்வை:

பணக்காரர்கள், நாளை நாளை மறுநாள் என குறுகிய காலத்திற்கு ஏற்ப திட்டம் தீட்ட மாட்டர்கள். ஒரு கனவை அடைய வேண்டும் என மனதில் வைத்து விட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி அதை இவர்கள் செய்து முடித்தே தீருவர். பணம் அதிகம் வருகிறது என்பதற்காக நம்பிக்கை அற்ற வகையில் எந்த விஷயம் இருந்தாலும் அதில் இவர்கள் பணத்தை முதலீடு செய்ய மாட்டர்கள். எதை எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என ஷார்பாக திட்டம் தீட்டி அதன் வழியில் பயணிப்பர். எதை செய்தாலும் மனதில் உறுதியுடன் தங்களுக்காக வகுத்த பாதையில் நிதானமாக செல்வர். இறுதிக்கட்டத்தை அடைய அவர்களுக்கு சில காலங்கள் தேவை படலாம். ஆனால் கண்டிப்பாக அடைய வேண்டிய தூரத்தை இவர்கள் அடைவார்கள். 

5.பல வகையில் வருவாய்:

இதுதான் இருப்பதிலேயே மிகவும் முக்கியமான ரகசியம். எல்லா பணத்தையும் எப்போதும் ஒரே இடத்தில் முதலீடு செய்யக்கூடாது. ஒரே இடத்தில் மொத்த பணத்தையும் சேர்த்தால் எல்லாம் மொத்தமாக போய்விட வாய்ப்புகள் அதிகம். அதனால், பணக்காரர்கள் தங்களது வருவாய்களை பிரித்து பல இடங்களில் முதலீடு செய்து, பல்வேறு வகைகளில் சம்பாதிப்பர். இதனால், பண வருவாய் நிற்கப்போவதில்லை. கையில் இருந்த பணமும் இரட்டிப்பாகி கொண்டே இருக்கும். பல்வேறு சொத்துக்களில் நாம் முதலீடு செய்வ்தால் கண்டிப்பாக வருவாயும் அதிகமாகும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஏதேனும் ஒரு வகையில் வரும் வருவாய் நின்று போனாலும் அதை இன்னொன்றில் சேமித்து ஈடு செய்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு தரப்பில் வந்த பெரிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News