பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

இந்தியா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2018, 03:38 PM IST
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம் title=

இந்தியா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுனத்தில் 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை எனவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. www.bsnl.co.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.  விண்ணப்பம் இணைப்பு

பணியிடம் : மேலாண்மை டிரெய்னி 

நிர்வாகம் : பிஎஸ்என்எல் 

காலிப்பணியிடம் : 300

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்இ/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. எஸ்இ/எஸ்டி பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : ஜனவரி 26, 2019. 

தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் 17, 2019.

விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலே இணைக்கப்பட்டு உள்ள (விண்ணப்பம் இணைப்பு) கிளிக் செய்க.

Trending News