மது அருந்தி விமானம் ஓட்ட வந்த ஜப்பான் விமானி கைது!

மதுபானம் அருந்தி விமானம் ஓட்ட வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

Last Updated : Nov 2, 2018, 11:03 AM IST
மது அருந்தி விமானம் ஓட்ட வந்த ஜப்பான் விமானி கைது! title=

மதுபானம் அருந்தி விமானம் ஓட்ட வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜே எல் 44 ரக விமானம் ஒன்று நேற்று லண்டனிலிருந்து டோக்கியோவிற்கு பறக்க தயார் நிலையில் இருந்தது. 244 பயணிகள் அடங்கிய இந்த விமானத்தை கட்ஷுடோஷி ஜிட்ஷுகாவா என்ற விமான ஓட்டி இயக்குவதற்கு தயாராக இருந்தார். 

இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து விமானம் வரைக்கும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் பேருந்தில் ஜிட்ஷுகாவா பயணம் செய்தார். அப்போது அந்த விமான ஓட்டி மதுபானம் அருந்தி நிலையில் இருப்பதை கண்டறிந்த பேருந்து ஓட்டுனர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த விமான ஓட்டியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 29ம் தேதி வரை ஜிட்ஷுகாவாவை கோர்ட் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

Trending News