இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... இனி இரட்டிப்பு பலன்!

Free Ration: மத்திய அல்லது மாநில அரசின் இலவச ரேஷன் வசதியை ஒருவர் பயன்படுத்தி வந்தால், இனிமேல் அவர் மற்றொரு பெரிய பலனைப் பெறப் போகிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 30, 2023, 07:32 PM IST
  • இதுகுறித்து உத்தர பிரதேச அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும்.
  • ஆன்லைனிலும், நேரடியாகவும் அதை இணைக்கலாம்.
இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... இனி இரட்டிப்பு பலன்! title=

Free Ration: இலவச ரேஷன் திட்டம் புதுப்பிப்பு: இலவச ரேஷனால் பயனடைபவர்களுக்கு ஒரு சிறந்த தகவல் கிடைத்துள்ளது. மத்திய அல்லது மாநில அரசின் இலவச ரேஷன் வசதியை ஒருவர் பயன்படுத்தி வந்தால், இனிமேல் அவர் மற்றொரு பெரிய பலனைப் பெறப் போகிறார். அரசின் திட்டத்தின்படி, அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷனுடன், இலவச மருத்துவ சிகிச்சை வசதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சிகிச்சையின் பலன் கிடைக்கும்

அனைத்து அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. இதற்காக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வசதி பல மையங்களில் அந்த அரசால் செய்யப்பட்டு வருகிறது, இதில் ரேஷன் கார்டைக் காட்டி பொது வசதி மையத்தில் ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டுகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சாரம் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய மிகப்பெரிய அறிவிப்பு இன்று.. ஊதியத்தில் நிச்சய ஏற்றம்!!

அரசாங்கத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, உங்கள் சிகிச்சையைப் பெற நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தற்போது, புதிய ஆயுஷ்மான் கார்டுகள் அரசால் தயாரிக்கப்படவில்லை, மாறாக ஏற்கனவே பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும், இலவச ரேஷன் பெறுபவர்கள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். ஆதாருடன் ரேஷன் இணைக்கும் தேதி கடந்த மார்ச் 31 ஆக இருந்தது, பின்னர் இந்த தேதி ஜூன் 30 ஆக நீடிக்கப்பட்டது, அந்தவகையில் இனி ஆதாருடன் ரேஷனை இணைக்க இன்றே கடைசி தேதியாகும். ரேஷன் கார்டை ஒரே நாடு-ஒரே ரேஷன் என அரசு அறிவித்ததில் இருந்தே, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது குறித்து மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. 

ஆன்லைன் இணைப்பது எப்படி?

- பொது விநியோக அமைப்பின் இணையதளத்திற்குச் செல்லவும் (ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த PDS போர்டல் உள்ளது).
- ரேஷன் அட்டையுடன் உங்கள் ஆதாரை இணைக்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- அந்த வரிசையில் உங்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
-'continue/submit' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் போனில் OTP வரும். அதை உள்ளிடவும்.
- செயல்முறை முடிந்ததும், உங்களுக்கு SMS அனுப்பப்படும்.

நேரிலும் இணைக்கலாம்

நேரடியாக சென்று ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க விரும்பினால், ஆதார் அட்டையின் நகல், ரேஷன் அட்டையின் நகல் மற்றும் ரேஷன் வைத்திருப்போரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அடிக்கடி தியேட்டர் போகிறவரா நீங்கள்... ஆன்லைன் டிக்கெட்டில் கிடைக்கும் சூப்பர் தள்ளுபடிகள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News