ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி! அரசு எடுத்த பெரிய முடிவு

கரிப் கல்யாண் யோஜனாவின் காலத்தை அதிகரித்த பிறகு, தற்போது தகுதியான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச ரேஷன் பெறுவார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2022, 03:19 PM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
  • ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு இரண்டு மடங்கு ரேஷன் இலவசமாக வழங்கப்படும்
  • துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி! அரசு எடுத்த பெரிய முடிவு title=

புதுடெல்லி: ரேஷன் கார்டு லேட்டஸ்ட் நியூஸ்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் இருமுறை இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், இலவச ரேஷன் விநியோக பிரச்சாரம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, உத்தரபிரதேசத்தில் 15 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இரட்டிப்பு ரேஷன் இலவசமாகப் பெறுவார்கள். 

இரு மடங்கு ரேஷன் இலவசமாக கிடைக்கும்
மத்திய அரசின் கரிப் கல்யாண் யோஜனா நீட்டிப்புக்குப் பிறகு, தற்போது உ.பி.யின் தகுதியான ரேஷன் கார்டுதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச ரேஷன் பெறுவார்கள். உண்மையில், தற்போது பயனாளிகள் கோதுமை மற்றும் அரிசியை மாதம் இருமுறை இலவசமாகப் பெறுவார்கள். இதனுடன், பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Naukri தளத்தில் அதிக WFH வேலைகளை தேடிய இந்தியர்கள்! 

இத்திட்டத்தின் மூலம் ஏழைகள் பயன்பெறுகின்றனர்
உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸுக்குப் பிறகு, அரசாங்கம் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகளுக்கு ஆதரவளிக்கிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் காலம் நவம்பரில் முடிவடைய இருந்தது, ஆனால் யோகி அரசாங்கம் அதை ஹோலி வரை நீட்டித்து இலவச ரேஷன் விநியோகத்தை அறிவித்தது. தற்போது அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு டிசம்பர் முதல் இரட்டிப்பு ரேஷன் வழங்கப்படுகிறது. 

பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா என்றால் என்ன?
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா உதவியுடன் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டம் எப்பொழுது  செயல்படுத்தப்பட்டது?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாடும் முழுவதும் பொதுமுடக்கம் அமல் செய்யப்பட நிலையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பிரதமரின் கரிப் கல்யாண் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்தது. ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Salary Hike: பணியாளர்களுக்கு வாழ்த்துகள்! அனைவருக்கும் சம்பளம் மிக அதிகமாக உயரப்போகுது! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News