தன்னை கற்பழிக்க வந்த காமுகரின் நாக்கை துண்டித்த பெண் மருத்துவர்!

பெண் மருத்துவரை கற்பழிக்க செய்ய முயன்ற நபரின் நாக்கை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Jun 8, 2019, 11:48 AM IST
தன்னை கற்பழிக்க வந்த காமுகரின் நாக்கை துண்டித்த பெண் மருத்துவர்! title=

பெண் மருத்துவரை கற்பழிக்க செய்ய முயன்ற நபரின் நாக்கை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

உலகை சுற்றி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. என்னதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் எங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை மிருத்தமுடியவில்லை. குழந்தையில் இருந்து மூதாட்டியையும் விட்டுவைக்காமல் தங்களின் காம இச்சைக்கு இறையக்கி விடுகின்றனர் சில காம கூடூரர்கள். 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் தன்னை கற்பழிக்க வந்த காமுகரின் நாக்கை ஒரு பெண் மருத்துவர் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் மருத்துவர் இந்த நபருடன் போராடியதோடு நாக்கையும் கடித்து துப்பியுள்ளார். 

அவர் கடித்த வேகத்தில் அந்த நபரின் நாக்கு துண்டாகிவிட்டது. நாக்கின் ஒரு துண்டை இழந்த அந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார் அப்போது அந்த பெண் மருத்துவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் தப்பி ஓட முயன்ற அந்த நபரை கைது செய்யதனர். மருத்துவமனை ஒன்றிற்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending News