சூரிய பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது

ஜோதிடத்தில் சூரியனின் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாளை அதாவது மே 15ஆம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக போகிறார். சூரியனின் இந்த ராசி மாற்றம் விருஷப சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 14, 2022, 09:38 AM IST
  • சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்தது
  • நாளை சூரிய பெயர்ச்சி ஆகும்.
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு.
சூரிய பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது title=

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். அதன்படி, சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு வந்தார். பொதுவாக சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் ஜோதிடத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் மே 15 ஆம் தேதி அதாவது நாளை சூரியன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். 

இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. ரிஷப ராசியில் சூரியன் நுழைவது விருஷப சங்கராந்தி எனப்படும். இதற்குப் பிறகு, அடுத்த 30 நாட்களுக்கு சூரியன் ரிஷப ராசியில் இருப்பார். எனவே இந்த சூரிய பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் 

சூரியனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

ரிஷபம்: சூரியன் ரிஷப ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். இந்த சூரிய பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உத்தியோகம் செய்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் கௌரவம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க இது சாதகமாக நேரமாகும். அதே சமயம் வியாபாரிகளின் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். நிதி ரீதியாக முன்னேற்றம் அடையலாம். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரம். வெற்றி பெருகும். 

சிம்மம்: ரிஷப ராசியில் சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தந்தையிடமிருந்து சிறப்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். அவர்கள் வாழ்வில் நல்ல நாட்கள் வரும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை, பண விஷயங்களில் முன்பை விட நிலைமைகள் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தடைபட்ட பணிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News