தலைமுடியை கோகோ-கோலா கொண்டு அலசினால் என்ன ஆகும் தெரியுமா?

பலரும் விரும்பி பருகக்கூடிய கோகோ-கோலா பானத்தை கொண்டு தலைமுடியை அலசுவதால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும் என்று ஒரு பெண் காட்டியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2023, 07:20 AM IST
  • கோகோ-கோலா என்பது கார்பனேற்றப்பட்ட நீர்.
  • முடியின் வேர்களை அது பாதித்துவிடும்.
  • முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தலைமுடியை கோகோ-கோலா கொண்டு அலசினால் என்ன ஆகும் தெரியுமா? title=

பெண்களுக்கு அழகே அவர்களது கூந்தல் தான், பலரும் இப்போது தங்கள் கூந்தலின் மீது அக்கறை கொண்டு அழகுபடுத்த தொடங்கிவிட்டனர்.  தங்களால் விரும்பும்படியான கூந்தலை பெறவும் பல பெண்கள் சிகிச்சை எடுத்து கொள்கின்றனர்.  சிலர் கூந்தலுக்கு இயற்கையான முறையையும், சிலர் செயற்கையான முறையையும் பின்பற்றி வருகின்றனர்.  முடி பளபளப்பாக இருப்பதற்காக சில பெண்கள் பீரில் தலை அலசுவதை பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு பெண் முடிக்கு கோகோ-கோலா பானத்தை கொண்டு முடியை அலசும் செயல் வைரலாகியுள்ளது.  கோக் கொண்டு தனது முடியை அலசியதால் தான் பளபளப்பான கூந்தலை பெற்றதாக அந்த பெண் நிரூபித்து இருக்கிறார், இது நெட்டிசன்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.  எளிதாக கடையில் கிடைக்கக்கூடிய கோக்கை பயன்படுத்தி பளபளப்பான கூந்தலை பெற முடியும் என்றால் யாருக்கு தான் இதை செய்து பார்க்க ஆசை வராமல் இருக்கும்.  இருப்பினும் இந்த சோடா கலந்த பானத்தை தலையில் சேர்ப்பதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்று பலருக்குள்ளும் ஒருவித அச்ச உணர்வு இருக்கும்.  இப்போது கோகோ கோலா பயன்படுத்தி முடியை அலசுவதால் என்னென்ன மாற்றம் நிகழும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு முன் உங்கள் ஜோடியிடம் இந்த 10 விஷயங்களையும் பேசிவிடுங்கள்... இல்லனா ரொம்ப கஷ்டம்!

பொதுவாக கோக் எனப்படும் கோகோ-கோலா என்பது கார்பனேற்றப்பட்ட நீர், சர்க்கரை (கார்ன் சிரப்), பாஸ்போரிக் அமிலம், காஃபின், இயற்கை சுவையூட்டும் முகவர்கள் மற்றும் செயற்கை உணவு வண்ணம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அமில குளிர்பானமாகும்.  இந்த சர்க்கரை பானத்தைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவும் போது, ​​அனைத்து பொருட்களும் உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் படிந்து, முடியின் வேர்களை அது பாதித்துவிடும்.  இந்த பானத்திலுள்ள அமிலத்தன்மை  முடியின் மேற்பகுதியை மூடி, அவற்றை பளபளப்பாகக் காட்டுகிறது.  கோக்கில் எந்த சர்பாக்டான்ட்களும் இல்லை, எனவே அது உச்சந்தலையையும் முடியையும் சுத்தப்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  கோகோ-கோலா பானத்திலுள்ள கார்ன் சிரப் மற்றும் பிற பொருட்கள் உச்சந்தலையில் குவிந்து க்ரீஸ், அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

கோகோ கோலாவுடன் முடியைக் கழுவுவது எப்படி?

500 மி.லி கோக் நிறைந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக உங்களால் முடியில் தேய்த்து, அந்த பானத்தை முடி முழுவதிலும் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.  பின்னர் தலையிலுள்ள கோகோ-கோலாவை பிழிந்தெடுத்து, அதன் பின்னர் நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் ஷாம்பூவை கொண்டு தலையை அலசி காய வைக்க வேண்டும்.  முடியை அலசுவதற்கு முன்னர் உங்கள் முடியின் தன்மை எப்படி இருந்தது, முடியை அலசிய பிறகு முடியின் தன்மை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்து பார்த்தால், முதலில் இருந்ததைவிட இப்போது முடி பளபளப்பாக இருப்பதை உணர முடியும்.  கோகோ கோலா ஒரு சர்க்கரை பானம், லீவ்-இன் கண்டிஷனர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை கோக் கொண்டு கழுவிய பின் நன்றாக அலசிவிட வேண்டும்.  மேலும் ரசாயனம் குறைவான ஷாம்பூவை தலைமுடிக்கு பயன்படுத்துங்கள் மற்றும் தலைமுடியை அலசுவதற்கு முன்னர் முடியை சிக்கு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.  

அடுத்ததாக தலைக்கு கோகோ-கோலாவை பயன்படுத்தும்போது அது குளிர்ச்சியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், குளிர்ச்சியாக உள்ள பானத்தை அறை வெப்பநிலையில் வாய்த்த பின்னரே தலைக்கு பயன்படுத்துங்கள்.  அடிக்கடி தலைமுடிக்கு கோகோ-கோலாவை பயன்படுத்தாதீர்கள், ஏனென்றால் இது உங்கள் முடியின் இயற்கையான பளபளப்பு மற்றும் ஈரப்பதத்தை பாதிக்கக்கூடும்.  தலைமுடிக்கு கோக் பயன்படுத்துவது சில சமயங்களில் உச்சந்தலையில் எரிச்சல், ஸ்கேலிங், எரியும், சிவத்தல் மற்றும் உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.  உச்சந்தலையில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த செயலை தவிர்க்க வேண்டும்.  கோக்கைப் பயன்படுத்துவதற்கு முன்னும், பின்னும் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.  கோக்கில் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடலையும், அமைப்பையும், உங்கள் ட்ரெஸ்ஸுக்கு பிரகாசத்தையும் சேர்க்கும்.  இருப்பினும், கோக்கில் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் நிறைய சர்க்கரை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன... காரணம் தெரியுமா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News