வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் இந்த 3 ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா?

இந்த 3 ராசிக்காரர்களை நினைத்து குடும்பமே பெருமைப்படும் அளவுக்கு தொழிலிலும், பணியிலும் வெற்றித்தடம் பதிப்பவர்கள்... 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2022, 12:55 PM IST
  • வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் ராசிகள்
  • இந்த ராசி பெண்களைவிட ஆண்களுக்கே அதிக பலன்!
  • இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்கும் ராசிக்காரர்!
வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் இந்த 3 ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா? title=

புதுடெல்லி: எந்த நபர் தொழில் வெற்றிக்காக கடினமாக உழைக்கிறார் அல்லது குறைந்த உழைப்பிலும் அதிக முன்னேற்றம் அடைகிறார் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் எளிதில் தெரிந்துக் கொள்ளலாம்.

சிலர் அதிர்ஷ்டசாலியாக பிறக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் பெறுவது மட்டுமல்லாமல், அவர்கள் வித்தியாசமான அடையாளத்தையும் உருவாக்குகிறார்கள்.

இந்த நபர்கள் தங்கள் தொழிலில் நிறைய முன்னேறி பெரிய உயரங்களை அடைகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு நிறைய பெயரைக் கொண்டு வருகிறார்கள். அதனால்தான் குடும்பம் எப்போதும் அவர்களைப் பற்றி பெருமையாக நினைக்கிறது.

இந்த 3 ராசிக்காரர்கள் (Zodiac Signs) தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைபவர்கள். அவர்களை நினைத்து குடும்பமே பெருமைப்படும் அளவுக்கு தொழிலிலும், பணியிலும் வெற்றித்தடம் பதிப்பவர்கள் இவர்கள்... 

அதிலும், குறிப்பாக இந்த ராசி பெண்களை விட இந்த மூன்று ராசிகளின் ஆண்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது.

ALSO READ | பிப்ரவரியில் இந்த ராசியில் 6 கிரகங்களின் சங்கமம்: யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

மேஷம்: ஜோதிடத்தின் படி, மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் தைரியமானவர்கள். நம்பிக்கை அவர்களுக்குள் இயல்பாகவே இருக்கக்கூடியது.

எனவே அவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்வதில் தயங்குவதில்லை. அவர்களுடைய இந்த குணங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய முன்னேற்றத்தை அளிக்கின்றன. 

அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பணத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கிறார்கள். இவர்களைப் பற்றி அவரது குடும்பம் பெருமிதம் கொள்கிறது.

ரிஷபம்: ரிஷபம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் தாக்கத்தால், இந்த ராசியில் பிறந்த ஆண்கள் கலா ரசிகர்களாக இருப்பார்கள். 

அவர்களது ஆளுமையில் ஒரு அற்புதமான வசீகரம் இருக்கும். எப்பொழுதும் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். அதற்காக நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கடுமையாக உழைபபர்கள்.

தங்கள் குடும்பத்தின் பெயருக்கு பெருமை சேர்ப்பதற்காக பாடுபடுபவர்கல் ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள். 

ALSO READ | சூரியனின் பரிவர்த்தனையால் இந்த ராசிக்கு சுபம்?

மகரம்: மகர ராசிக்கு அதிபதி சனி. சனியின் தாக்கத்தால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் உழைப்பாளிகளாகவும், விடா முயற்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

அவர்கள் தங்கள் இலக்கை அடைந்த பிறகு தான் இயல்பாகுவார்கள். தனது வேலைகளால் நிறைய புகழையும் செல்வத்தையும் பெருவார்கள்.

வாழ்க்கையில் மிகுந்த மரியாதையைப் பெறும் மகர ராசிக்காரர்கள், பணியிடத்திலும், சமூக வாழ்க்கையிலும் நல்ல பெயர் பெறுவார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | சனி பெயர்ச்சி 2022: எந்த ராசிக்கு சூப்பரா இருக்கும் தெரியுமா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News