ஏர் இந்தியா விமானத்தில் இனி ஜெய்ஹிந்த் முழக்கம் ஒலிக்கும்!

ஏர் இந்தியா விமானத்தில் இனி ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க ஏர் இந்தியா விமான பணிப்பெண்களுக்கு அந்த விமான நிறுவனம் கட்டளையிட்டுள்ளது. 

Last Updated : Mar 5, 2019, 11:18 AM IST
ஏர் இந்தியா விமானத்தில் இனி ஜெய்ஹிந்த் முழக்கம் ஒலிக்கும்! title=

ஏர் இந்தியா விமானத்தில் இனி ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க ஏர் இந்தியா விமான பணிப்பெண்களுக்கு அந்த விமான நிறுவனம் கட்டளையிட்டுள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருவதால் இந்திய மக்கள் இடையே தேசப்பற்று உணர்வு தற்போது அதிகரித்துள்ளது. இதன்படி விமான பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பு வெளியிடும் போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று ஏர் இந்தியா கட்டளையிட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்:-

ஏர் இந்தியாவின் ஒவ்வொரு விமானத்தில் ஒவ்வொரு முறை ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு முடிக்கும் போது ஜெய்ஹிந்த் என்ற தேசத்தை போற்றும் முழக்கத்தை ஒலிக்க வேண்டும். ஏர் இந்தியா அனைத்து விமான நிறுவன ஊழியர்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Trending News