உலக அழகி மனுஷி சிலார் மும்பைக்கு வருகை!

67-வது உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லார் மும்பைக்கு வருக்கிறார். 

Last Updated : Dec 2, 2017, 04:04 PM IST
உலக அழகி மனுஷி சிலார் மும்பைக்கு வருகை! title=

சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டிற்கான 67-வது உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் மனுஷி சில்லார். 

இந்தியாவை சேர்ந்த இவர் ஏற்கனவே மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஏற்கனவே ரெய்டா பரியா, ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, பிரியங்க சோப்ரா என்று இந்தியாவில் இதுவரை ஐந்து பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர். 

கடைசியாக பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப்பெண் உலக அழகி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

மேலும்,நேற்று இவரை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனுஷி சில்லருக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி விருது வழங்கி சிறப்பித்தார்.
 
இதை தொடர்ந்து, தற்போது மனுஷி சில்லர் மும்பை வருகிறார். அவருடைய வருகையை எட்டி எராளமான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகின்றனர்.  

Trending News