ஊரடங்கில் சிக்கிய மனைவி.. கூப்பிட்டும் வராததால் 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவர்.

பிரதமர் திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால், உறவுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டது. அதில் தன் மனைவி திரும்ப வரமுடியாததால், அந்த பெண்ணின் கணவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 17, 2020, 07:27 AM IST
  • பரத்புராவில் வசிக்கும் டிராஜ் குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
  • ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு, அந்தப் பெண் ஏதோ வேலைக்காக தாய் வீட்டிற்கு சென்றார்.
  • திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பெண் கணவரின் வீட்டிற்கு திரும்பி வர முடியவில்லை.
  • இரண்டாவது திருமணம் குறித்த தகவல் கிடைத்ததும், பெண் கணவர் மீது புகார் அளித்தார்.
ஊரடங்கில் சிக்கிய மனைவி.. கூப்பிட்டும் வராததால் 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவர். title=

பாலிகஞ்ச்: கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் தொடர்ந்து பதிவாகி வருன்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் தங்குமாறு அரசு அறிவித்தது. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு காரணமாக உறவுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டு உள்ளது. அதில் ஒரு பெண் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்பொழுது பிரதமர் திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால், அவள் திரும்பி கணவரின் வீட்டிற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு. இருந்தும், அவரது கணவர் அவளை தொடர்ந்து அழைத்துள்ளார். ஆனால் அவரால் வரமுடியாததால், அவளின் ​​கணவர் வேறுஒரு திருமணம் செய்து கொண்டார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இரண்டாவது திருமணம்:
இந்த முழு சம்பவம் பீகாரின் துல்ஹின் பஜார் காவல் நிலையம் பற்றியது. தகவல்களின்படி, பரத்புராவில் வசிக்கும் தீரஜ் குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு கார்பி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். தீரஜின் மனைவி சில வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவளால் மீண்டும் பரத்புராவுக்கு வர முடியவில்லை. இதற்கிடையில் தீரஜ் தனது மனைவியை திரும்பி வரச் சொல்கிறார்.

ரகுநாத்பூரில் இரண்டாவது திருமணம் செய்த கணவர்: 
இருப்பினும், ஊரடங்கு உத்தரவு , கணவரின் அழைப்பின் பேரில் கூட தீரஜின் மனைவி கன்னியிலிருந்து திரும்ப முடியவில்லை. இதனால் கோபமடைந்த தீரஜ் குமார் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். ரகுநாத்பூரில் தனது காதலியுடன் மறுமணம் செய்து கொண்டார். இது குறித்து தீரஜின் முதல் மனைவி அறிந்தவுடன், துல்ஹான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கணவர் மீது புகார் அளித்த பெண்:
கணவரின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் கிடைத்ததும், முதல் மனைவி துல்ஹின்பஜார் காவல் நிலையத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் இரண்டாவது திருமணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் துலிராஜ் குமார் போலீசார் கணவர் தீரஜ் குமாரை விசாரணைக்கு அழைத்தனர். இதன் பின்னர், அவர் வியாழக்கிழமை சிறைக்கு அனுப்பப்பட்டார்.

Trending News