120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சாமியார்... யார் இந்த ஜலேபி 'பாபா' ?

120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்த அமர்புரி என்ற ஜலேபி பாபாவை குற்றவாளி என நிரூபணம் ஆனது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2023, 08:59 AM IST
  • ஜலேபி பாபா போதை வஸ்துகளை பெண்களுக்கு கொடுத்து வீடியோ எடுத்துள்ளார்.
  • சாமியார் ஆவதற்கு முன்னர் ஜிலேபி விற்றுள்ளதால் இந்த பெயர் வந்துள்ளது.
120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சாமியார்... யார் இந்த ஜலேபி 'பாபா' ? title=

120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத்  கோயில் குருக்களாக இருந்த ஜலேபி பாபா என்ற அமர்புரி என்பவர் மீது பல்வேறு பாலியல் ரீதியிலான வழக்குகள் இருந்தன. அதன்மீதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து அவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, அவரின் குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின. 

சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோஹானாவின் ரயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜலேபி பாபா என்றழைக்கப்படுகிறார். அமர்புரி, ஜலேபி பாபாவாக மாறி, அதன்பின் பாலியல் குற்றவாளியாக மாறிய கதை அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தக்கூடியது. 

மேலும் படிக்க | டிரக் மீது மோதிய பைக்; மயிரிழையில் உயிர் தப்பிய நபர்! வைரலாகும் CCTV காட்சிகள்!

ஜலேபி பாபா குறித்து போலீசார் தெரிவிக்கையில், ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன்பு அவருக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.  அதாவது, அந்த பெண்கள் மீது ஆவி புகுந்திருப்பதாக கூறி பயத்தின் காரணமாக, அவர்களை சூனிய பூஜைகளில் சுய விருப்பத்துடன் கலந்து கொள்ள வைக்கிறார். தந்திர வித்யா சடங்குகளின் போது, ​​அவர் அவர்களை மயக்கமடையச் செய்து, பின்னர் அவர்களை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூலித்து வந்தார். அதுமட்டுமின்றி, வீடியோக்களை கசியவிட்டு விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார்.

120 ஆபாச படங்கள்

ஜலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் ஆபாச வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது அவரது அறையில் இருந்து போதை மாத்திரைகள், பூஜை பொருள்களை போலீசார் கைப்பற்றினர்.

ஜிலேபி வியாபாரி எப்படி தந்திரி ஆனார்?

ஜலேபி பாபாவின் இயற்பெயர் அமர்வீர். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலம் மான்சாவில் இருந்து ஹரியானா மாநிலம் தோஹானாவுக்கு வந்தார். பின்னர் தோஹானா ரயில்வே சாலையில் ஜிலேபி கடை வைத்திருந்தார். அவரது மனைவி இறந்த பிறகு, ஜலேபி பாபா பில்லி, சூன்யம் போன்ற செய்வினை தொழிலைத் தொடங்கியுள்ளார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தோஹானாவுக்குத் திரும்பினார். அன்று முதல் பெண்களை வலையில் சிக்க வைத்து வன்புணர்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஆண்ட்டிகளை குறிவைக்கும் சீரியல் கில்லர்... இதுவரை 3 கொலை - அச்சத்தில் மக்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News