உத்தரகண்ட் சாலை விபத்தில் 13 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்!

ராம்நகர்-அல்மோரா சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்!

Last Updated : Mar 13, 2018, 01:14 PM IST
உத்தரகண்ட் சாலை விபத்தில் 13 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்! title=

உத்தரகண்ட்: ராம்நகர்-அல்மோரா சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்!

உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர்-அல்மோரா டோட்டலுக்கு அருகே உள்ள சாலையில் போருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்த போது தடண்புரண்டு பாதாளத்தில் பாய்ந்தத்து. இந்த போருந்தில் 24 பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த மீட்புபடையினர், சம்பவயிடத்திற்கு விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெளியான தகவலின்படி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதர பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்திற்கான காரணம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

(மேலும் விபரங்கள் காத்திருக்கிறது)

Trending News