பாஜக-வில் இணைந்த BSP தலைவர்கள்; குழப்பத்தில் மாயாவதி!

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மற்றொரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 

Last Updated : Dec 6, 2019, 01:51 PM IST
பாஜக-வில் இணைந்த BSP தலைவர்கள்; குழப்பத்தில் மாயாவதி! title=

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மற்றொரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு மிக நெருக்கமான இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் திரிபுவன் ராம் மற்றும் முன்னாள் அமைச்சர் வினோத் சிங் ஆகியோர் பாஜக-வில் இணைந்துள்ளனர். 

வினோத் சிங், மறைந்த காங்கிரஸ் தலைவர் கே.என். சிங்கின் மகனான இவர் பகுஜன் சமாஜ் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் ஆவார். இவர் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய திரிபுவன் ராம் மாயாவதியின் ஆட்சிக் காலத்தில் PWD தலைவராக இருந்தார். இதனுடன், லக்னோ மற்றும் நொய்டாவில் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் பூங்காக்களுக்கும் பொறுப்பேற்றார். 

அவர் PWD தலைவராக இருந்தபோது மாயாவதி அரசாங்கத்தால் அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது பாஜக-வில் இணைந்துள்ள அவர், கடந்த வியாழன் அன்று பகுஜன் சமாஜ் கட்சி தனது இனவெறி மனப்பான்மையால் அதன் பொருத்தத்தை இழந்து வருவதாக பத்திரிகைகளிடம் தெரிவித்திருந்தார்.  செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்., 'B.R.R. அம்பேத்கர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷி ராம், ஒரு கட்சி ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஆட்சியில் இருக்கும்போதுதான் உதவ முடியும் என்று கூறினார். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இதைப் பின்பற்றவில்லை." என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும்., பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஏழை சார்பு கொள்கைகள் மற்றும் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி ஆகியவற்றால் தாங்கள் ஆழமாக செல்வாக்கு செலுத்துவதாக ராம் மற்றும் வினோத் சிங் தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களும் கட்சிக்கு அதிகாரம் அளித்து அதை முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்றும் உத்தரபிரதேச பாஜக பிரிவு தலைவர் ஸ்வந்திரா தேவ் சிங் குறிப்பிட்டுள்ளார். 'அவர்கள் ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் தொடர்ந்து உழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்' என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமைக்கு மிகவும் நெருக்கமான இவர்கள் இருவரம் தற்போது பாஜக-வில் இணைந்திருப்பது உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழுந்த பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

Trending News