எல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவனுக்கு இனிப்பு வழங்கி அனுப்பிய இராணுவம்!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து வழியனுப்பிய இந்திய ராணுவம்!!

Last Updated : Jun 28, 2018, 07:05 PM IST
எல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவனுக்கு இனிப்பு வழங்கி அனுப்பிய இராணுவம்! title=

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து வழியனுப்பிய இந்திய ராணுவம்!!

கடந்த திங்கள்கிழமை (ஜூன்-25) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர காவல் படையினர், எல்லைப் பகுதியை அத்துமீறி கடந்ததாக பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் பகுதியே சேர்ந்த சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். 

பின்னர் விசாரணையில் இச்சிறுவன் கவனக்குறைவாக எல்லையை கடந்து வந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. பின்னர் சட்டரீதியான நடைமுறைகள் முடித்தப்பின்னர் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த சிறுவனை சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர் இன்று அவனுக்கு புதிய உடை மற்றும் இனிப்பு கொடுத்து இந்திய இராணுவத்தினர் எல்லை பகுதிக்கு அழைத்து சென்று  பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கபட்டார். 

 

Trending News